அமெரிக்க மண்ணில் வள்ளுவர் தெரு
உலகமே வியக்கும் கருத்துக்களை உடையது தமிழரின் தலைசிறந்த இலக்கியப் படைப்பான திருக்குறள். 'பொய்யாமொழி' என்பதற்கேற்ப முற்றும் பொருந்தும் வாழ்விற்கான செய்திகளைக் கூறுவது. நூறு மொழிகளுக்கும் மேலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுதிருக்குறள். உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாக திருக்குறள் உள்ளது. தற்போது திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவரின் பெயர் அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலம் பேர்பெக்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தெருவிற்கு சூட்டப்பட்டுள்ளது. இது தமிழரை பெருமிதம் அடையச் செய்துள்ளது.
இதற்கு முயற்சி எடுத்த வள்ளுவன் தமிழ் மையம் அமெரிக்க மண்ணில் முதல் முறையாக வெர்ஜினியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெரு உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. இது பற்றிய வெர்ஜினிய மாநிலவை உறுப்பினர் தனது கீச்சகப் பதிவில், தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். புகழ்பெற்ற கவிஞர்
வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக வள்ளுவர் தெரு என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தெரு ஆங்கிலத்தில் 'Valluvar way'என்று அழைக்கப்பட உள்ளது.
|