LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்

என்பொருட்பிரிவுணர்த்து ஏந்திழைக்கென்றல்.
275.
வேலாடு கண்ணி கலைசைத் தியாகர்வெற் பிற்சுரம்போய்
நீலாம் பகத்தி முலைவி‍லைக் கேற்கு நிதிகவர்ந்து
கோலா கலமுட னந்திக்குன் றுள்ளன கொண்டுவரும்
பாலாறு போல்வரு வேனிது காதிற் பதிவிப்பையே. 1

பாங்கி நின்பொருட்பிரிவுரை நீ அவட்கென்றல்.
276.
பாற்கங்கை சூடுங் கலைசைத் தியாகர் பருப்பதத்தின்
மேற்கண்ணி மார்ப நலந்தீ திரண்டுநின் மேலனவாம்
தீற்கங்கொ ளிவ்வெண்ண மெம்பெரு மாட்டி திருவுளத்துக்
கேற்கும் படிவல்லை யேற்சொல்லி நீபின் னெழுந்தருளே. 2

நீடேனென்றவன் நீங்கல்.

277.
மந்தியம் போதி வருகையிற் றேர்பண்ணி வன்சுரம்போய்ப்
பந்தியம் போதக மேனிதி கொண்டு பயின்மன்றற்கா
நந்தியம் போடைக் கலைசைத் தியாகர்நன் னாடனையாய்
அந்தியம் போது வருவேனும் மூர்மகிழ்ந் தாலிக்கவே. 3

பாங்கி தலைமகட்குத் தலைமகன் செலவுணர்த்தல்.
278.
இல்லத் தமரரு மேவுன் முலைவிலைக் ‍கெண்ணரிதாம்
நல்லத்த மீந்து மணம்பெறு வான்பொன் னகைப்பொகுட்டு
வில்லத்தங் கொண்ட கலைசைத் தியாகர்மெய் மார்க்கம்வரார்
செல்லத்த மின்றுசென் றார்நம தன்பர் திருந்திழையே. 4

தலைமகள் இரங்கல்.
279.
திருந்தன மென்னடை யாய்தென் கலைசைத் தியாகர்வெற்பிற்
பெருந்தன மென்னிடைப் பெற்றுமென் னோவன்பர் பேசுகிலா
திருந்தனம் வேறொன்று தேடச் கரங்கடந் திட்டினிநான்
அருந்தனம் ‍வேம்பென லாம்படி போம்படி யானதுவே. 5

பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்.
280.
வரம்போ தருமன்ப ருன்பொருட் டானிதி வாரிவரச்
சுரம்போ யினர்தென் கலைசைத் தியாகர் சுடர்வரைப்பூ
நிரம்போதி மங்கையிவ் வூரவர் தூற்றலர் நீக்கமின்றிச்
சரம்போலத் தைக்கையி னீபுலம் பாநிற்குந் தன்மைநன்றே. 6

தலைவி கொடுஞ்சொற் சொல்லல்.
281.
நீணாகம் பூண்ட கலைசைத் தியாகரை நீங்கிநின்றே
வாணாள் கழிக்கும்வன் னெஞ்சரின் வெஞ்சுர மன்னரன்னோ
வீணாள் படச்சென்ற வவ்வா றறிந்துமென் வேட்கைகண்டும்
காணா தவரி னெனைத்தெளிப் பார்க்கென் கழறுவதே. 7

வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்.
282.
தென்சாம கண்டர் கலைசைத் தியாகர் சிலம்பிடத்துன்
மென்சாயல் காட்டி மயில்விலக் காநிற்கும் வேட்கையுற
வன்சா ரலினின் விழிபோல் லிழித்தந்த மான்மடக்கும்
பின்சா ணளவுஞ்செல் லாரன்பர் பேதுறல் பெண்கொடியே. 8

பருவங்கண்டு பெருமகள் புலம்பல்.
283.
தாரேற வண்டினங் கொன்றையெல் லாமென் றடமுலைமேற்
பீரேறப் பீரிற்கண் ணீரேற வாடும் பிணிமுகங்கட்
கேரேறத் தொட்டிக் கலைவாழ் சிதம்பர வீசர்வெற்பிற்
காரேறக் கண்டுநம் மன்பர்பொற் றேர்வரக் கண்டிலமே. 9

இகுளை வம்பென்றல்.
284.
வாடிய பைந்தினைக் காமுரு கோனை வணங்கிநமர்
கூடியங்கார்த்திடக்கொண்மூச்சொரிந்தனகொண்டல்வண்ணன்
தேடிய பாதர் கலைசைத் தியாகர் சிலம்பினிற்கண்
டாடிய மஞ்ஞை யிதுகா ரெனவஞ்சி யஞ்சலையே. 10

இறைமகள் மறுத்தல்.
285.
வம்பார் தனத்தி கலைசைத் தியாகர்முன் மாலயனெவ்
வம்பா றிடவழற் குன்றாய்நின் றென்ன மலைமுழுதும்
வம்பார்செங் காந்தளுங் கோபமுந் தோன்றி வயங்குதலால்
வம்பாகு மோவுன்சொல் வம்பாவ தன்றியிம் மைக்கொண்டலே. 11

அவர்தூதாகி வந்தடைந்தது இப்பொழுதெனத்
துணைவி சாற்றல்.
286.
வண்டூதைம் பாலி கலைசைத் தியாகர் வரையிடைத்து
வண்டூதைக் கொல்குங் கொடிபோற் றெருமரல் மன்னர்வெற்றி
வண்டூதத் தேர்மிசை யின்னேபொன் னேந்தி வருவரென்று
வண்டூ துரைப்பமுன் னேவந்த தாலிந்த மைம்முகிலே. 12

தலைமகள் ஆற்றல்.
287.
ஒருவா விருதலைப் புட்போ னமக்குயி ரொன்றெனமுன்
திருவாய் மலர்ந்தருள் செய்தநங் காதலர் செம்பொருட்கா
வெருவாது கான்சென் றுழிமறந் தெம்மை விடுவர்கொலோ
வருவாரிக் காரிற் கலைசைத் தியாகர் வரையகத்தே. 13

அவன் அவட் புலம்பல்.
288.
அள்ளற் பழனக் கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
எள்ளத் தனையு மிரக்க மிலாரென் றெனையுநொந்த
உள்ளத்தி னோடழுங் கண்ணீர்வெள் ளெத்தி னுழிதருங்கால்
மெள்ளப் பிடித்தெடுப் பாருமுண் டோவந்த மின்னினையே. 14

மீண்டுவருகின்ற காலத்துத் தலைமகன்
பாகனொடு சொல்லல்.
289.
மாடையி னாற்று முடித்தேர் வலவ மடந்தைசங்கோ
டாடை யுகாமுன் கலைசைத் தியாக ரளித்தருளும்
ஓடைகொள் செங்கழு நீர்க்குஞ் சரத்தை யுனதுளத்திற்
கோடைவெங்காலெனக்கோடையின்கால்செலக் கொள்ளுதியே. 15

தலைமகன் மேகந்தன்னொடு சொல்லல்.
290.
தன்னே ரிலாத கலைசைத் தியாகர் தடங்கிரிமேல்
முன்னேகி னாலும்மை மொய்குழ லால்வென்று முற்றிழையாள்
இன்னேயும் மின்னையுந் தன்னிடையால் வெல்லுமென் மணித்தேர்ப்
பின்னே வரின்முகில் காள்பெறு வீர்நற் பெருமிதமே. 16

பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவறிவுறுத்தல்.
291.
இந்தனஞ் சேரெரி போன்றவெப் பாறத்தண் ணேரியதாய்ச்
சந்தனம் பூசு தனத்தினல் லாய்தடந் தேரிலன்பர்
கந்தனை யீன்ற கலசத் தியாகர் கலைசையின்கண்
வந்தனர் வந்தன ரென்றினி தார்க்கும் வலம்புரியே. 17

வலம்புரி கிழத்தி வாழ்த்தல்.
292.
சங்கத்தி லோர்கண்ணர் பெண்ணொரு பாகத்தர் தண்ணருளாற்
சங்கத் தமிழ்நிறை கூடல் வணிகர்தந் தையலர்க்குச்
சங்கத்த மிட்ட கலைசைத் தியாகர் சரதகங்கைச்
சங்கத்தின் வாழியென் சஞ்சலந் தீர்த்த தனிச்சங்கமே. 18

இதுவுமது.
293.
போதாந்தர் போற்றுநன் மங்கல நாணென்றும் பூண்டவெங்கள்
மாதா வளர்சிவ காமிகண் டத்தணி வாய்ந்துநறும்
தாதாடுங் கொன்றைக் கலைசைத் தியாகர் தமக்கினிய
வேதா சலத்தின் புகழ்போல் விளங்குக வெண்சங்கமே. 19

தலைமகன் வந்துழிப் பாங்கி தம்மை நினைத்தமை வினாதல்.
294.
புனைந்துமந் தாகினி பொற்சடை மீது பொருபுலித்தோல்
வனைந்துநின் றாடுங் கலைசைத் தியாகர் வரையன்பரே
நினைந்து மறிதிர்கொல்லோவிரு போதுங்கண் ணீர்மழையால்
நனைந்து கிடக்கு முடையாளை நீர்சென்ற நாட்டகத்தே. 20

தலைமகன் நினைத்தமை செப்பல்.
295.
எனையும்வந் தாண்ட கலைசைத் தியாகரை யேத்தியிரு
வினையுங் கழித்தவர் தொண்டைநன் னாடன்ன மின்னினையும்
உனையுமெப் போதுகண் டேன்கண்ட நாண்முத லோரிடத்தும்
நினையும் பரிசில்லை யான்மற வாமை நிலைத்தபின்னே. 21

தலைமகளை ஆற்றுவித்திருந்த அருமை கூறல்.
296.
சிவங்காட் டியதென் கலைசைத் தியாகர் சிலம்பவுன்றன்
தவங்காட் டியவுரு வைப்படந் தீட்டித் தயங்கநவ
நவங்காட்டித் தேர்சென்ற நல்வழி காட்டிநின் னன்றியனு
பவங்காட்டி யாற்றுவித் தேனெங்கள் பாவையைப் பாலிருந்தே. 22.

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.