LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா

(எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )
நீரிழிவு எனும்வார்த்தை பாரினையே கலக்கிறது
யாருக்கு வருமென்று யாருக்கும் தெரியாது
எல்லோரும் நீரிழிவை எதிரியாய்ப் பார்க்கின்றார்
வல்லவரும் நல்லவரும் நீரிழிவால் வாடுகிறார் !

நல்லகாலம் இருப்பார்க்கு நீரிழிவு வருவதில்லை
அல்லல்தரும் நோயெனவே அனைவருமே எண்ணுகிறார்
அறுசுவையுள் பலவற்றை அணுகிடவே முடியாமல்
அடக்கிவைக்கும் நோயாக நீரிழிவு வந்திருக்கு !

நீரிழிவு இப்போது யாரையுமே விடுவதில்லை
ஏழை பணக்காரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை
குழந்தைமுதல் கிழவர்வரை கொடுக்கிறது தொல்லியினை
நலமிழந்து வாடிநிற்க நீரிழிவு செய்கிறது !

உணவைக் குறையுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
நலன்கெடுக்கும் வகையினிலே நடக்காது இருந்திடுங்கள்
பசித்தவுடன் உண்ணுங்கள் புசித்தவுடன் உறங்காதீர்
எதற்குமே பதட்டமதை இயன்றவரை தடுத்திடுவீர் !

இனிப்புக் குறைவென்று எழுதிவைத்த உணவுகளை
இயன்றவரை தவிர்த்துவிடல் எல்லோர்க்கும் உகந்ததுவே
காய்கறிகள் உண்டிடுங்கள் கனிகள்தேர்ந் தெடுத்திடுங்கள்
வாழ்வினிலே நிறைவாக வாழ்வதற்கு வழிபிறக்கும் !

காசில்லாப் பயிற்சி கனக்கவே இருக்கிறது
யாருமே அப்பயிற்சி தனைக்கண்டு கொள்வதில்லை
கிடைக்கின்ற நேரமதில் நடைப்பயிற்சி செய்துவிடின்
உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகி வருமன்றோ !

நீரிழிவு வியாதிபற்றி நினையாமல் இருக்கையிலே
எப்படியோ வந்தெங்கள் இன்பமதைப் போக்கிவிடும்
விழிப்புணர்வு எனுமுணர்வு எமைவிட்டு அகலுவதும்
வில்லங்கம் வருவதற்கு காரணமாய் இருக்குதன்றோ !

வெள்ளம் வருமுன்னே அணைகட்டிக் காப்பதுபோல்
தெள்ளத் தெழிவாக விழிப்புணர்வைப் பெறவேண்டும்
வந்தபின்பு எல்லோரும் நொந்துநிற்கும் நிலைமாறி
வாராமல் காப்பதற்கு வழிவகைகள் தேவையன்றோ !

by Swathi   on 28 Nov 2017  0 Comments
Tags: Kavithai about Diabetes   வாராமல் காத்திடுவோம்   ஜெயராமசர்மா   நீரிழிவு கவிதை   சர்க்கரை நோய் கவிதை        
 தொடர்புடையவை-Related Articles
வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.