LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

பல்வகைப் பாடல்கள் - நீதி பகுதி - 1

 

1. புதிய ஆத்திசூடி
காப்பு-பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ்.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.
2. பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!  1
சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2
கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!  3
பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!  4
வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!  5
காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6
பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!  7
பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!  8
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!  10
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!  11
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!  12
வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!  13
வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!  14
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.  15
உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!  16
3. முரசு
 
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!
1. ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.
2. வேத மறிந்தவன் பாப்பான்,-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்,
நீதி நிலைதவ றாமல்-தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
3. பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.
4. நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
5. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.
6. ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்
யாவரும் ஓர்குலம் அன்றோ!
மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.
7. சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.
10. கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்
பெதைமை யற்றிடுங் காணீர்.
11. தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.
12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:
13. யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.
14. வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.
15. சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
16. எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.
18. நிகரென்று கொட்டு முரசே!-இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.
19. அன்பென்று கொட்டு முரசே-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.
20. அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
21. உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?
22. மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம்,-இங்கு
சேர்ந்த உணவெலை யில்லை.
23. வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.
24. உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு
தின்று பிழைத்திட லாமோ?
25. வலிமை யுடையது தெய்வம்,-நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?
26. தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்
தானடி மைகொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?
27. அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
28. அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
29. பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்
பற்றுஞ் சதோதரத் தன்மை,
யாருக்கும் தீமைசெய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.
30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

1. புதிய ஆத்திசூடி
காப்பு-பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்துமோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்உருவகத் தாலே உயர்ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல்
அச்சம் தவிர்ஆண்மை தவறேல்.இளைத்தல் இகழ்ச்சிஈகை திறன்உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்புஎண்ணுவது உயர்வுஏறுபோல் நடஐம்பொறி ஆட்சிக்கொள்ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.ஓளடதம் குறை.கற்றது ஒழுகு.காலம் அழியேல்.கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.குன்றென நிமர்ந்து நில்.கூடித் தொழில் செய்.கெடுப்பது சோர்வுகேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்றுகொடுமையை எதிர்த்து நில்.கோல்கைக் கொண்டுவாழ்கவ்வியதை விடேல்.சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்சிதையா நெஞ்சு கொள்.சீறுவோர்ச் சீறு.சுமையினுக்கு இளைத்திடேல்.சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்சேர்க்கை அழியேல்.சைகையில் பொருளுணர்.சொல்வது தெளிந்து சொல்சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.ஞமலிபோல் வாழேல்.ஞாயிறு போற்றுஞிமறென இன்புறு.ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.தன்மை இழவேல்.தாழ்ந்து நடவேல்.திருவினை வென்று வாழ்.தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடுதூற்றுதல் ஒழி.தெய்வம் நீ என் றுணர்.தேசத்தைக் காத்தல் செய்.தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.தோல்வியில் கலங்கேல்.தவத்தினை நிதம் புரி.நன்று கருது.நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்நீதிநூல் பயில்.நுனியளவு செல்.நூலினைப் பகுத்துணர்.நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.நையப் புடை.நொந்தது சாகும்.நோற்பது கைவிடேல்.பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.பிணத்தினைப் போற்றேல்.பீழைக்கு இடங்கொடேல்.புதியன விரும்பு.பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.பேய்களுக்கு அஞ்சேல்.கொய்மை இகழ்.போர்த் தொழில் பழகு.மந்திரம் வலிமை.
மானம் போற்று.மிடிமையில் அழிந்திடேல்.மீளுமாறு உணர்ந்துகொள்.முனையிலே முகத்து நில்.மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.மேழி போற்று.மொய்ம்புறத் தவஞ் செய்.மோனம் போற்று.மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.யாரையும் மதித்து வாழ்.யௌவனம் காத்தல் செய்.ரஸத்திலே தேர்ச்சிகொள்.ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.ருசிபல வென்றுணர்.ரூபம் செம்மை செய்.ரேகையில் கனி கொல்.ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.லவம் பல வெள்ளமாம்.லாகவம் பியற்சி செய்.லீலை இவ் வுலகு.(உ)லுத்தரை இகழ்.
(உ)லோக நூல் கற்றுணர்.லௌகிகம் ஆற்று.வருவதை மகிழ்ந்துண்.வான நூற் பயிற்சி கொள்.விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்குவெடிப்புறப் பேசு.வேதம் புதுமை செய்.வையத் தலைமை கொள்.வௌவுதல் நீக்கு.
2. பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா!-நீஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!கூடி விளையாடு பாப்பா!-ஒருகுழந்தையை வையாதே பாப்பா!  1
சின்னஞ் சிறுகுருவி போலே-நீதிரிந்து பறந்துவா பாப்பா!வன்னப் பறவைகளைக் கண்டு-நீமனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2
கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்கூட்டி விளையாடு பாப்பா!எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்குஇரக்கப் படவேணும் பாப்பா!  3
பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்பசுமிக நல்லதடி பாப்பா!வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அதுமனிதர்க்கு தோழனடி பாப்பா!  4
வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லுவயலில் உழுதுவரும் மாடு,அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவைஆதரிக்க வேணுமடி பாப்பா!  5
காலை எழுந்தவுடன் படிப்பு-பின்புகனிவு கொடுக்கும்நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு-என்றுவழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6
பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்புறஞ்சொல்ல லாகாது பாப்பா!தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருனதீங்குவர மாட்டாது பாப்பா!  7
பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்பயங்கொள்ள லாகாது பாப்பா!மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!  8
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்சோர்ந்துவிட லாகாது பாப்பா!அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீதிடங்கொண்டு போராடு பாப்பா!  10
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்தாயென்று கும்பிடடி பாப்பா!அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!  11
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்தொழுது படித்திடடி பாப்பா!செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்தினமும் புகழ்ந்திடடி பாப்பா!  12
வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்வாழும் குமரிமுனை பாப்பா!கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!  13
வேத முடையதிந்த நாடு,-நல்லவீரர் பிறந்ததிந்த நாடு;சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்தெய்வமென்று கும்பிடடி பாப்பா!  14
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்புநிறை உடையவர்கள் மேலோர்.  15
உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்உண்மையென்று தானறிதல் வேணும்;வயிர முடையநெஞ்சு வேணும்;-இதுவாழும் முறைமையடி பாப்பா!  16
3. முரசு வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!
1. ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்;சீருக் கெல்லாம் முதலாகும்-ஒருதெவ்ம் துணைசெய்ய வேண்டும்.
2. வேத மறிந்தவன் பாப்பான்,-பலவித்தை தெரிந்தவன் பார்ப்பான்,நீதி நிலைதவ றாமல்-தண்டநேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
3. பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி.தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்சோம்பலைப் போல்இழி வில்லை.
4. நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்தநான்கினில் ஒன்று குறைந்தால்,வேலை தவறிச் சிதைந்தே-செத்துவீழ்ந்திடும் மானிடச் சாதி.
5. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்ஓங்க வளர்ப்பவன் தந்தை;மற்றைக் கருமங்கள் செய்தே-மனைவாழ்ந்திடச் செய்பவள் அன்னை.
6. ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்யாவரும் ஓர்குலம் அன்றோ!மேவி அனைவரும் ஒன்றாய்-நல்லவீடு நடத்துதல் கண்டோம்.
7. சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்குநித்தமும் சண்டைகள் செய்வார்.
8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்புதன்னில் செழித்திடும் வையம்;ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவிபேணி வளர்த்திடும் ஈசன்;மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்லமாத ரறிவைக் கெடுத்தார்.
10. கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்திகாட்சி கெடுத்திட லாமோ?பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்பெதைமை யற்றிடுங் காணீர்.
11. தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்;உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்ஓர்பொரு ளானது தெய்வம்.
12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்திககை வணங்கும் துருக்கர்,கோயிற் சிலுவையின் முன்னே-நின்றுகும்பிடும் யேசு மதத்தார்:
13. யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்யாவினும் நின்றிடும் தெவ்ம்,பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்பற்பல சண்டைகள் வேண்டாம்.
14. வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்வீட்டில் வளருதுகண்டீர்;பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவைபேருக் கொருநிற மாகும்.
15. சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்சாந்து நிறமொரு குட்டி,பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி.
16. எந்த நிறமிருந் தாலும்-அவையாவும் ஒரேதர மன்றோ?இந்த நிறம்சிறி தென்றும்-இஃதுஏற்ற மென்றும் சொல்லலாமோ?
17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்மானுடர் வேற்றுமை யில்லை,எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்குயாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.
18. நிகரென்று கொட்டு முரசே!-இந்தநீணிலம் வாழ்பவ ரெல்லாம்;தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்சாதி வகுப்பினை யெல்லாம்.
19. அன்பென்று கொட்டு முரசே-அதில்ஆக்கமுண் டாமென்று கொட்டு;துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்சூதுப் பிரிவுகள் போனால்.
20. அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்அத்தனை பேரும் நிகராம்;இன்பங்கள் யாவும் பெருகும்-இங்குயாவரும் ஒன்றென்று கொண்டால்.
21. உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்வுலகில் மனிதரெல் லாரும்;இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?
22. மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்குவார்த்ததை ஓங்கிடச் செய்வான்;சிரத்தை யுடையது தெய்வம்,-இங்குசேர்ந்த உணவெலை யில்லை.
23. வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்குவாழும் மனிதரெல் லோர்க்கும்;பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்பங்கைத் திருடுதல் வேண்டாம்.
24. உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்வுலகினில் மனிதரெல் லோரும்;திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்குதின்று பிழைத்திட லாமோ?
25. வலிமை யுடையது தெய்வம்,-நம்மைவாழ்ந்திடச் செய்வது தெய்வம்;மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னைவீழ்த்தி மிதித்திட லாமோ?
26. தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்தானடி மைகொள்ள லாமோ?செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்சிற்றடி மைப்பட லாமோ?
27. அன்பென்று கொட்டு முரசே!-அதில்யார்க்கும் விடுதலை உண்டு;பின்பு மனிதர்க ளெல்லாம் கல்விபெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
28. அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்அத்தனை பேருக்கும் ஒன்றாய்;சிறியாரை மேம்படச் செய்தால்-பின்புதெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
29. பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்பற்றுஞ் சதோதரத் தன்மை,யாருக்கும் தீமைசெய் யாது-புவியெங்கும் விடுதலை செய்யும்.
30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்குவாழும் மனிதருக் கெல்லாம்;பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்.
31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்ஓங்கென்று கொட்டு முரசே!நன்றென்று கொட்டு முரசே!-இந்தநானில மாந்தருக் கெல்லாம்.

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.