LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

பல்வகைப் பாடல்கள் - நீதி பகுதி - 2

 

2. சமூகம்
1. புதுமைப் பெண்
 
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!  1
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே! 2
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ! 4
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ! 5
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! 7
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம். 8
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ; 9
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.! 10
2. பெண்கள் வாழ்க!
 
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் சதியென்ற நாமமும். 1
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம். 2
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம். 3
பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா! 4
சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரனேவ,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் கவித்துநின் றாடுவோம். 5
உயிரைக் காக்கும்,உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்,ஆடு களிகொண்டே 6
போற்றி தாய் என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா!
போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே 8
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9
3. பெண்கள் விடுதலைக் கும்மி
 
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.
1. கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!  (கும்மி)
2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.   (கும்மி)
3. மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி)
4. நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.   (கும்மி)
5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.  (கும்மி)
6. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!  (கும்மி)
7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.  (கும்மி)
8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!    (கும்மி)
4. பெண் விடுலை
 
விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1
திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. 2
விடியும் நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?
அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்விர்நந் தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே. 3
5. தொழில்
 
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!  1
மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 2
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள் களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!  3
6. மறவன் பாட்டு
மண்வெட்டிக் கூலிதின லாச்சே!-எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகர் போச்சே!இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!  1
நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு. 2
கன்னங் கரியவிருள் நேரம்-தில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே,  3
ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்,
கோழை யெலிக ளென்னவே-பொருள்
கொண்டு வந்து... ... ...  4
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார்-இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்!  5
பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை... ... ...
... ... ... ... ... ... ...   6
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;
கொள்கைக் கேகென்.............
... ... ... ... ... ... ...   7
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...   8
நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு
நாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.  9
சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?
வீர மறவர் நாமன்றோ?-இந்த
வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? 10
7. நாட்டுக் கல்வி
(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு)
 
விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;
துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொரு
காலம் நீர் சென்று தேடிய தில்லையோ? 1
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்றவிண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்,
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;
நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம்இசை
குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்
கூவு மாறொத் திருந்தன காண்டிரோ? 2
இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறைமு றைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி
போல மந்திர வேதத்தின் பேரொலி.
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே. 3
8. புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான். 2
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது, 3
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.  4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது.  5

2. சமூகம்
1. புதுமைப் பெண் போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்செய்ய தாமரைத் தேமலர் போலொளிதோற்றி நின்றனை பாரத நாட்டிலே;துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகைசாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்சாதி செய்த தவப்பயன், வாழி நீ!  1
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்நாதந் தானது நாரதர் வீணையோ?நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியேமேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே! 2
அறிவு கொண்ட மனித வுயிர்களைஅடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ! 4
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்சால வேயரி தாவதொர் செய்தியாம்;குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ! 5
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்தன்னி லேபொது வான வழக்கமாம்;மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்மாத வப்பெரி யோருட னொப்புற்றேமுதுமைக் காலத்தில் வேதங்கள் பேசியமுறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! 7
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,ஓது பற்பல நூல்வகை கற்கவும்,இலகு சீருடை நாற்றிசை நாடுகள்யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கேதிலக வாணுத லார்நங்கள் பாரததேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதைவீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம். 8
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;சவுரி யங்கள் பலபல செய்வராம்;மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;காத்து மானிடர் செய்கை யனைத்தையும்கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ; 9
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!மாற்றி வையம் புதுமை யுறச்செய்துமனிதர் தம்மை அமரர்க ளாக்கவேஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்அருளி னாலொரு கன்னிகை யாகியேதேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.! 10
2. பெண்கள் வாழ்க! பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தனதாயின் பேரும் சதியென்ற நாமமும். 1
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம். 2
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்கலிய ழிப்பது பெண்க ளறமடா!கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம். 3
பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவேகாத லின்பத்தைக் காத்திடு வோமடா! 4
சக்தி யென்ற மதுவையுண் போமடா!தாளங் கொட்டித் திசைகள் அதிரனேவ,ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்ஊர்வி யக்கக் கவித்துநின் றாடுவோம். 5
உயிரைக் காக்கும்,உயிரினைச் சேர்த்திடும்;உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!ஊது கொம்புகள்,ஆடு களிகொண்டே 6
போற்றி தாய் என்று தோள்கொட்டி யாடுவீர்புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே,நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா!போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!காற்றி லேறியவ விண்ணையுஞ் சாடுவோம்காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே 8
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9
3. பெண்கள் விடுதலைக் கும்மி காப்புபெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்பேசிக் களிப்பொடு நாம்பாடக்கண்களி லேயொளி போல வுயிரில்கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.
1. கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!நம்மைப் பிடித்த பிசாசுகள் போயினநன்மை கண்டோ மென்று கும்மியடி!  (கும்மி)
2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்றவிந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.   (கும்மி)
3. மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதைவெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி)
4. நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்தநாயிடம் யோசனை கேட்பதுண்டோ?கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலைகூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.   (கும்மி)
5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இருகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.  (கும்மி)
6. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை காணென்று கும்மியடி!  (கும்மி)
7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்வேண்டி வந்தோ மென்று கும்மியடி!சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்சாதி படைக்கவும் செய்திடுவோம்.  (கும்மி)
8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்காரியம் யாவினும் கைகொடுத்து,மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!    (கும்மி)
4. பெண் விடுலை விடுத லைக்கு மகளிரெல் லோரும்வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றேதிடம னத்தின் மதுக்கிண்ண மீதுசேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1
திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;குறைவி லாது முழுநிகர் நம்மைக்கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;அறவி ழுந்தது பண்டை வழக்கம்;ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. 2
விடியும் நல்லொளி காணுதி நின்றே,மேவு நாக ரிகம்புதி தொன்றே;கொடியர் நம்மை அடிமைகள் என்றேகொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,அறிவு யாவும் பயிற்சியில் வென்றேகடமை செய்விர்நந் தேசத்து வீரக்காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே. 3
5. தொழில் இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!கரும்பைச் சாறு பிழிந்திடு வீரேகடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்பிரம தேவன் கலையிங்கு நீரே!  1
மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!உண்ணக் காய்கனி தந்திடு வீரே!உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 2
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!பரத நாட்டியக் கூத்திடு வீரே!காட்டும் வையப் பொருள் களின் உண்மைகண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!தேட்ட மின்றி விழியெதிர் காணும்தெய்வ மாக விளங்குவிர் நீரே!  3
6. மறவன் பாட்டு
மண்வெட்டிக் கூலிதின லாச்சே!-எங்கள்வாள்வலியும் வேல்வலியும் போச்சே!விண்முட்டிச் சென்றபுகர் போச்சே!இந்தமேதினியில் கெட்டபெய ராச்சே!  1
நாணிலகு வில்லினொடு தூணி-நல்லநாதமிகு சங்கொலியும் பேணி,பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்போர்செய்த காலமெல்லாம் பண்டு. 2
கன்னங் கரியவிருள் நேரம்-தில்காற்றும் பெருமழையும் சேரும்;சின்னக் கரியதுணி யாலே எங்கள்தேகமெல்லாம் மூடிநரி போலே,  3
ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்தஈன வயிறுபடும் பாட்டில்,கோழை யெலிக ளென்னவே-பொருள்கொண்டு வந்து... ... ...  4
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்மூன்றுமழை பெய்யுமடா மாதம்;இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார்-இவர்ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்!  5
பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;யாரானா லும்கொடுமை... ... ...... ... ... ... ... ... ...   6
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;கொள்கைக் கேகென்................ ... ... ... ... ... ...   7
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ...   8
நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்புநாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.  9
சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்சூரர் பெயரை அழிப்போமோ?வீர மறவர் நாமன்றோ?-இந்தவீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? 10
7. நாட்டுக் கல்வி
(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு) விளக்கி லேதிரி நன்கு சமைந்ததுமேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!களக்க முற்ற இருள்கடந் தேகுவார்காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொருகாலம் நீர் சென்று தேடிய தில்லையோ? 1
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டேஆசை யென்றவிண் மீன்ஒளிர் செய்ததே;துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்,சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்;நீங்கள் கண்ட கனாக்களெல் லாம்இசைகுன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்கூவு மாறொத் திருந்தன காண்டிரோ? 2
இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலிமுறைமு றைபல ஊழியின் ஊடுற்றேபின்னை இங்குவந் தெய்திய பேரொலிபோல மந்திர வேதத்தின் பேரொலி.இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்அருளும் இந்த மறையொலி வந்திங்கேஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே. 3
8. புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;படிப்பு வளருது;பாவம் தொலையுது;படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்போவான்,போவான்,ஐயோவென்று போவான். 2
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;மந்திர மெல்லாம் வளருது,வளருது, 3
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!அந்திரி,வீரி,சண்டிகை சூலி!குடுகுடு குடுகுடு.  4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;எட்டு லச்சுமியும் ஏறி வளருது;பயந் தொலையுது,பாவந் தொலையுது,சாத்திரம் வளருது, சாதி குறையுது;நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது.  5

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.