LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

வரிப்பணத்தில் விளம்பரமா?

 தமிழகத்தின் தேசியக் கவிஞராக தன் ‘ கவியின் கனவு ’ நாடகத்தின் மூலம் மிகுபுகழ் பெற்றிருந்த திரு . எஸ் . டி . சுந்தரம் அவர்களுக்கு இதயத்திலே அமைதியில்லை . தமிழ் நாட்டை ஒரு ‘ ராக்கெட் ’ வேகத்தில் முன்னேற்ற முடிவெடுத்து , அல்லும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்துச் செயலாற்றி இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கையில் இரண்டாமிடத்துக்குக் கொண்டுவந்து விட்ட நிலையிலும் பொதுத் தேர்தல்களில் எதிர்க்கட்சியாக வெறும் மேடை முழக்கவாதிகளாகயிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தன் ஆதரவு வாக்காளர் விகிதத்தை உயர்த்திக் கொண்டே வருவது ஒரு புரியாத புதிராகவே அக்கவிஞர் மனதை உறுத்தியது .

நீள நினைந்த அக்கவிஞருக்கு இதற்கு விடையாகத் தோன்றியதெல்லாம் காமராஜர் அரசு தன் சாதனைகளைப் பாமர மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமையே என்பதுதான் . அக்காலக் கட்டத்தில் இந்தியாவிலே மிக அதிகமான சினிமா என்னும் திரையரங்குகளை உடைய மாநிலமாக இருந்தது தமிழ்நாடே என்பதை உணர்ந்தார் . திரையரங்கு எண்ணிக்கை வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட்ட ஒரு நாட்டின் மேலுமொரு வளர்ச்சியே என்று நிபுணர்கள் கூறினாலுங்கூடத் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்கைத் திராவிட முன்னேற்ற கழகத்தினரே கையகப்படுத்தி இருப்பதையும் உணர்ந்தார் . எனவே அச்சாதனத்தைக் காங்கிரஸ் இயக்கமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மிகத்தீர்க்கமான முடிவுக்கு வந்தார் .

அந்த எண்ணத்தை நெஞ்சிலே ஏந்தித் தலைவர் காமராஜரைச் சென்று கண்டார் .

‘ ஜயா ! நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற சாதனைகளை நீங்களும் உங்கள் நல்லாட்சியும் செய்திருந்தாலும் நமக்குக் கிட்ட வேண்டிய மக்களாதரவு எதிர்க்கட்சிக்கே செல்வதைப் பார்க்கும் போது நாம் நமது சாதனைகளைப் பாமரமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில் சற்றே பின் தங்கியே இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ’ என்றார் கவிஞர் .

அவர் கூற்றைக் கூர்ந்து கேட்ட காமராசர் , ‘ அப்படியா ?… சரி , அதற்கென்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க ? என்று அவரிடமே யோசனை கேட்டார் . உடனே கவிஞர் , ‘ ஐயா ! திரைப்படங்கள் மிக வலிமை மிக்க சாதனங்கள் . நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நாட்டு நடப்புகளைக் கொண்டு செல்வது அவைகள் தான் . இதை நாமும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . நமது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் தொகுத்து ஒரு செய்திப்படம் ( டாகுமென்டரி ) ஒன்றைத் தயாரித்து வெளியிட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் அவை சென்றடையும் ’ என்றார் .

‘ நாம்ப மக்களுக்காகச் செய்கிற காரியங்களை நாம்பளே விளம்பரப்படுத்தனுமா ?… சரி , இதுக்கு எவ்வளவு செலவாகும் ’ என்று கேட்டார் காமராசர் .

‘ சுமாரா ஒரு மூன்று லட்சம் ரூபா இருந்தா எடுத்துடலாம்னு நினைக்கிறேன் ஐயா ’ என்று கவிஞர் கூற துடித்துப்போன காமராஜர் ,

‘ ஏ … அப்பா … மூணுலட்சமா ? மக்கள் தந்த வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா ? அந்த மூன்று லட்ச ரூபாய் இருந்தா நான் இன்னும் மூணு பள்ளிக் கூடத்தைத் திறந்திடுவேனே … வேண்டாம் … படமெல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாம் ’ என்று சொல்லிக் கவிஞரை அனுப்பிவிட்டார் .

இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் திறக்கும் பாலங்களுக்குக் கூட எல்லா நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்து பல லட்சங்களில் விழா எடுக்கிறார்கள் . எல்லாம் ஏழையழுது தந்த கண்ணீரான வரிப்பணத்தில் . ஆனால் இவர்களிலிருந்து முற்றும் மாறுபட்ட தலைவராக விளங்கினார் காமராசர் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.