LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

வற்றும் நதி

வாழ்க்கை என்னும் ஓர் வற்றும் நதி

அதில் வாழத் துடிப்பது மனிதன் விதி

யாவும் மாயையென அறியா மதி

உன்னை அடிமையாக்குமே எல்லாம் சதி!



பொய்யும் மெய்யேற்றிப் பேசுமடா

தினம் புகழுக்கு ஏங்கியே சாகுமடா

மெய்யும் பொய்யாய் மாறுமடா

தினம் வாழ்க்கை போலியாய் போகுமடா!



தன் மனம் தான் நன்று என்றிடுமாம்

தனைத் தவிர பிறர் கண்டு சிரித்திடுமாம்

பிறர் பாடும் துதிக்காக ஏங்கிடுமாம்

துதிபாட மறந்துவிட்டால் பொங்கிடுமாம்!



ஊருக்குள் உபதேசம் செய்திடுவார்

உள் வீட்டிற்குள் உண்மையை மறந்திடுவார்

பேருக்குப் பெருமையாய் வாழ்ந்திடுவார்

பிறர் வாழ்வில் தாழ்வு கண்டு இகழ்ந்திடுவார்!



தன் அறிவு பாராட்ட விருப்பம் வரும்

தன் தவறை மறைக்கும் எண்ணம் வரும்

பிறர் தவறு நோக்கும் புத்தி வரும்

விசயமற்று விமர்சிக்கும் வித்தை வரும்!



கல்லை பாலாய்ப் பார்ப்பதுவோ

பாலையும் கல்லுடன் சேர்ப்பதுவோ

உண்மையைச் சொல்பவர் யார் எவரோ

அவரையும் இவருடன் சேர்ப்பதுவோ!



நிலையில்லா வாழ்வென தெரிந்துமே

மனம் நிலைக்கப் பொய்பலச் சொல்லுமே

உண்மை முன்வந்து நிற்பினும்

அதை மறுத்து புறம் தள்ளுமே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: வற்றும் நதி   Vatrum Nathi   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Vatrum Nathi Kavithai   Kavithai about Vatrum Nathi  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.