எரிபொருளை சிக்கனப்படுத்த மக்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது, பேருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்தை கொண்டுவர, அரசு அலுவலர்களும், அமைச்சர் பெருமக்களும், பொது மக்களும் வாரத்தில் ஒரு நாளாவது, பேருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள், சில குறிப்பிட்ட நகரங்களில் இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்து சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும்; வாகனங்களை சீராக பராமரிக்க வேண்டும்; சிக்னலில் காத்திருப்பவர்கள் இன்ஜின்களை நிறுத்தி விட வேண்டும்; டீசல் பம்புகள் உள்ளிட்டவைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு மொய்லி அறிவுரை தெரிவித்துள்ளார்.
|