LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

வீரர்கள் மத்தியில் மாவீரர்

 ஒரு சிப்பாய்தான் ஒரு சண்டையில் எதிரியின் காலை வெட்டியதாகப்பெருமை பேசினான் . இதைக்கேட்ட ஒருவர் , “ எதிரியின் தலையை வெட்டாமல் காலைப்போய் வெட்டியிருக்கும் காரணம் என்ன ?” என்றார் .

அதற்கு அந்தச் சிப்பாய் “ நான் என்ன செய்வேன் ? எதிரியுடைய தலைமை வேறொருத்தன் எனக்கு முன்னமே வெட்டி விட்டானே ” என்றான் .

ஆனால் நமது வீரர்கள்இப்படிப்பட்டவர் அல்லர் . தேச பக்தியும் அபரிமிதமான ஆற்றலும் கொண்டு எதிரியை நேருக்கு நேர் நின்று போரிட்டு விரட்டி அடிப்பார்கள் .

1965 இல் இந்தியா - பாகிஸ்தான்போர் மூண்ட போது பஞ்சாபில் போர் முனையில் காமராசர் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் . நூற்றுக்கணக்கான வீரர்களை சந்தித்துப்பேசி உற்சாகமூட்டினார் . அவரின் பேச்சை வீரர்கள் உற்சாகத்தோடும் , ஆர்வத்தோடும் கேட்டனர் .

ஒரு வீரர் தூய தமிழில் வணக்கம் என்று காமராசரின் கைகளைக் குலுக்கினார் . உடனே விழி விரிய அந்த வீரரிடம ஊர் , உறவினர்கள் முகவரி எல்லாம் கேட்டுக்கொண்டார் . வேறு பல வீரர்களின் தமிழக முகவரிகளையும் குறிததுக் கொண்டு , நான் அந்தப் பக்கம் போகும்போது அவர்களைச் சந்திக்கிறேன் என்று கூறினார் . வீரர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடி காமராசரை எங்கள் அண்ணன் என்று கூறினார்கள் .

1965 இல் லால் பகதூர் சாஸ்திரி சென்னைக்கு வந்தார் . யுத்த நிதியை தமிழக மக்கள் அவரிடம் கொடுத்தனர் . சென்னையில் இறுதி நிகழ்ச்சியாக அன்று மாளிகையில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடந்தது . அங்கு சாஸ்திரி பேசிய பேச்சு கேட்பவர்கள் மனதை நெகிழச் செய்தது . காமராஜ் ஜீ , காமராஜ் ஜீ என்ற அவர் குறிப்பிட்ட போதெல்லாம் கரகோஷம் எழுந்தது .

“ யுத்த களத்தில் நம் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் . அதற்குப் பிரதானமாக உதவியவை காமராஜ் ஜியின் யோசனைகளே . காமராஜ் ஜீ உடன் பிறவாச் சகோதரர் . அவர் எனக்கு வழி காட்டியாக விளங்கி என் மூலம் நாட்டை நடத்திச்செல்கிறார் . பகை முடிக்க அவர் கூறிய யோசனைகள் மிகப்பெரிய அளவில் உதவின ” என்று லால்பகதூர் சாஸ்திரி குறிப்பிட்டபோது எழுந்த கரவொலிஅடங்க நீண்ட நேரம் பிடித்தது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.