தேவையானவை :
முருங்கைக்காய் - 4 பெரிய வெங்காயம் - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி பச்சை மிளகாய் - 2 பூண்டு - 3 மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
1. முதலில் வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
2.குக்கரில் வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்க வேண்டும்.
3 முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்க வேண்டும். வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்க வேண்டும்.
4.மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
5.வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
6.முருங்கைக்காய், வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
7.கொதித்ததும் இறக்கி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, உப்பு லேசாக தூவி பரிமாற வேண்டும்.
|