|
||||||||
பட்டாணி சூப் |
||||||||
தேவையானவை : பச்சைப் பட்டாணி - 150 கிராம் உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - சிறிதளவு பூண்டு - 2 பல் எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு மிளகுத்தூள் - தேவையான அளவு வெண்ணெய் - 1டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : 1.முதலில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். 3. பிறகு அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும். 4. பின்னர் 300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவைக்கவும். 5. பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்றாக அரைக்கவும். 6. அரைத்த விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும். பின்னர் மறுபடியும் வடிகட்டவும். 7. அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 8. மீதி உள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் சேர்த்துப் பரிமாறவும். |
||||||||
by srikarthika on 22 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|