|
|||||
வெந்தயக் களி |
|||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - 300 கிராம்
நல்லெண்ணெய் - 50 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
செய்முறை :
1.புழுங்கல் அரிசியை நன்கு ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் இரவே ஊற வைத்த வெந்தயத்தை உளுந்தம் பருப்புடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
2.மாவை தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, வடைச் சட்டியில் ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
3.மாவுக் கரைசல் கெட்டியாக களிபோலத் திரண்டு வரும்போது தீயின் அளவைக் மிதமாக குறைத்து சர்க்கரையைத் தூவிக் கிண்ட வேண்டும்.
4.அவ்வாறு கிண்டும் போது கட்டிகள் வராத வண்ணம் நன்கு கிண்ட வேண்டும். தேவையான அளவில் உருண்டைகாளக உருட்டிக் கொள்ள வேண்டும்.
|
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|