LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி

வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி

அறிமுகம்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர் சவுதி அரேபியாவில் எந்திர பொறியியல் துறையில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சவுதி அரேபியத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக 16 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் முத்தமிழ் மன்றத்தின் செயல்பாட்டாளர் மற்றும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சவுதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு தளங்களில் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செயல்பட்டு வருகிறார்.

சமூகப் பணிகள்:

    தமிழால் வளர்ந்தவர் இவர். தமிழ்ச் சமூகத்தால் வளர்க்கப்பட்டவர். ‘கடவுளின் தேன்’ என்று அழைக்கக் கூடிய அளவிற்கு மிகச்சிறப்பான நல்லியல்புகளைக் கொண்ட நாடு சவுதி அரேபியா என்று கூறுகிறார். ‘இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை’ என்ற தலைப்பில் சவுதி முழுவதுமாக தமிழ் சார்ந்த சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். முத்தமிழ் மன்றத்தில் கலை சார்ந்து தொடங்கிய இவருடைய பயணம் சமூகப்பணியாகப் பரிணாமம் பெற்றது. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற .இந்த வாழ்க்கையில் கல்வி என்பது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. சவுதி அரேபியாவில் வழங்கப்படும் கல்வியில் தமிழும் ஒரு பாடமாக இடம் பெற வேண்டும் என முயற்சி செய்தவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

தமிழர்களுக்கான பணிகள்:

    வேலைவாய்ப்பினைத் தேடி சவுதி அரேபியாவிற்கு வரும் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களை முடிந்தவரை நிவர்த்தி செய்யும் பணிகளைத் திரு. சுரேஷ் பாரதி மற்றும் அவரது நண்பர்கள் கொண்ட தன்னார்வ குழுவானது செய்து வருகிறது. அரபு மொழியோ, ஆங்கில மொழியோ தெரியாவிட்டாலும் கூட, சவுதி அரேபியாவில் உள்ள காவல் துறையை எளிதில் அணுகலாம் என்ற நிலையை அங்கு பணிபுரியும் தமிழர்களுக்கு இவரது குழு உருவாக்கித் தந்திருக்கிறது. மேலும் அங்கே இறக்கும் இந்தியர்களின் உடலைத் தாயகம் அழைத்துச் செல்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவரது குழு செய்து வருகிறது. இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு அங்கே ஏற்படும் பணிச்சுமைகளை நீக்குதல், இறக்கும் போது வழங்கக்கூடிய இழப்பீடுத் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருதல், சம்பளப் பாக்கி போன்றவற்றைப் பெற்றுத் தருதல், பாதுகாப்பாகத் தாயகம் அனுப்புதல், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்ற பணிகளைத் தொடர்ந்து இவர் செய்து வருகிறார்.

எல்லைகளைக் கடந்த அன்பு:

    தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் உற்றார் ஒருவரும் இல்லாமல் வேலைதேடி பெரும்பாலான இந்தியர்கள் சவுதி அரேபியாவிற்கு வருகின்றனர். அவர்களுக்கு அங்கு ஒரு நம்பிக்கையாக இருக்கக்கூடிய இந்தியத் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாட்டாளர்களாகத் திரு. சுரேஷ் பாரதி மற்றும் பலர் செயல்படுகின்றனர். மாவட்ட, மாநில, நாட்டின் எல்லைகளைக் கடந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு பக்கபலமாக இவர் செயல்படுகிறார்.

    தொல்காப்பியரின் பிள்ளைகளாகிய நாம் தொல்காப்பியருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொல்காப்பிய சவுதி அரேபிய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார் திரு. சுரேஷ் பாரதி அவர்கள் மற்றும் திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்த்து சவுதி மக்களுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்து திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தார்.

by Lakshmi G   on 22 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.