|
||||||||
வேதாந்தம் - சித்தாந்தம் |
||||||||
தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும். அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அநுபோக பூர்வமாகப் பெற்றாக வேண்டும்.
தானே அவனாகவும், அவனே தானாகவும் - சிவனே சீவனாகவும், சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு, மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான், தெளிவோடு திருப்தியும் வரும். இதை நமது மனவளக்கலை மூலம் சாதிக்க முடிகிறது.
தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும், பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டும் தான் உண்டு.
அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே, ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும், இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும், எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல், இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக, இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்கை முறையே பக்திமார்க்கம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும். அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அநுபோக பூர்வமாகப் பெற்றாக வேண்டும்.
தானே அவனாகவும், அவனே தானாகவும் - சிவனே சீவனாகவும், சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு, மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான், தெளிவோடு திருப்தியும் வரும். இதை நமது மனவளக்கலை மூலம் சாதிக்க முடிகிறது.
தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும், பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டும் தான் உண்டு.
அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே, ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும், இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும், எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல், இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக, இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்கை முறையே பக்திமார்க்கம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 18 Jan 2014 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|