வாழ்க்கையை ஆக்கும் சிற்பி
எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி, எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.
தீய எண்ணம்
உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில், உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே.
பெரியோர் இயல்பு
உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு.
பெரியார்
அறிவு, சுகம், பொருள், அரசியல், விஞ்ஞானம் ஐந்து தத்துவங்கள் அறிந்தவன் பெரியோன்.
அறிவின் அளவு
அண்டமனைத்தும் ஓர் அடியால் அளக்கலாம் அணுக்குள் அடக்கலாம் , அவ் அறிவின் அளவையறி
எண்ணமும் செய்கையும்
எண்ணு, சொல்,செய் எல்லோர்க்கும் நன்மை தர, எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.
எண்ணத்தின் வலிமை
எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும், எண்ணத்தில், உறுதியும், ஒழுங்கும் அமைந்திடில்
உண்மை இன்பம்
பொங்குக பொங்குக! பூரித்து உள்ளமெலாம். எங்கும் நிறைந்தநம் ஏகாந்த நிலையறிந்து.
தியாகியும் ஞானியும்
கடமையுணர்ந்து அதைச் செயலில் காட்டுபவன் தியாகியாம், கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்.
கடவுளும் கடமையும்
கடமையில் உயர்ந்தவர் கடவுளை நாடுவார். கடவுளை அறிந்தவர் கடமையில் வாழுவார்.
கவலைக்கு மருந்து
இயற்கையை அறிந்துஒத்து எண்ணுபவர் எண்ணம் எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது.
ஆறு குணங்கள்
அறிவின் சலனமே காமமாதி ஆறுகுணங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து, அறிந்தவிடம் நிர்குணம்.
உனது பெருமை
அவனில் அணு, அணுவில் அவன், உன்னில் எல்லாம், நீ அறி உன்னை.
பெண்ணின் பெருமை
பெண் வயிற்றி லுருவாகிப் பெண் பாலுண்டே வளர்ந்தாய் பெண் துணையால் வாழ்கின்றாய் பெண்ணின் பெருமை உணர்.
எண்ணம் பிறக்குமிடம்
எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில், எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்.
மூவாசை அளவறிந்தால் கேடில்லை
மண்மீது பெண் துணையால் பொன் கொண்டே வாழ்கின்றோம், மாற்றுவதேன் மூவாசை ? மதியுடனே பயன் கொள்வோம்.
|