LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

வெயிலை விழுங்கும் சிறுக்கி

 

நிறைமதியம் கூட இவளுக்கு விலக்கில்லை
கள்ளச் சிறுக்கி 
கூந்தலுக்கு எண்ணெய்வைத்து மாதக்கணக்கிருக்கும்.
முள்முருக்கம் மிலாற்றைப்போல் மயிர்கள்.
கோரிக் கட்டி உச்சியிலே கொண்டை
இருந்தாலும் கைக்குள் அடங்காது பன்கூடை
போல கிளம்பியும் இந்தக் காப்பிலிச் சாதிக்கு
சூடில்லை, சுணையில்லை, மின்னிச் சுரை சுழன்று இருந்தாலும்
இறுக்க நேரமில்லை, நாள்முழுக்க கடப்புக்குள்
நின்று கிறுக்கத்தான் பொடிச்சிக்குப் பகல் காணும்.
சும்மா மூக்கோடித் திரிந்த பெட்டை
நான் பள்ளிக்குப் போகும் காலத்தில் இவள் தொடையில்
ஒரு கிள்ளுப் போட்டுவிட்டுப் போவேன். 
அரையில் ஒரு தழும்பு இவளுக்கு உண்டு. 
கீரைப் பாம்பு விளைந்த வயிற்றோடு தெரிவாள். 
இன்னும் நான் கலியாணம் செய்யாத கட்டை
இவளைப் பார்!
பெண்பிள்ளை வளர்த்தி யாழ்ப்பாண முருங்கைக்கு ஒத்ததுதான்.
என்னைக் கண்டாலும் இவளுக்கோர் சிலிர்ப்பு. 
பேய்ப் பெட்டை
ஆளறிந்து கொள்ளாத முன்சூத்தைப் பல்லீ.
முகம் கொஞ்சம் வௌிப்புத்தான்.
இடித்த மாவைப் போல இல்லாமல்
சந்தனத்தை உரைத்த நிறம்
உதட்டில் எவன் கடித்தான் ஒரு வெடிப்பு?
இவளுக்கு மூத்தவள்
அவளுக்கும் மூத்தவள்
ஒருத்தியுமே இவள்போல இல்லை.
கடப்புக்குள் இவள் நின்று எடுக்கின்ற நளினம்
எவன் மனதைச் சுண்டா?
கூசாமல் பார்ப்பாள்.
நாம் குனிந்து போனால்
இன்னும் ஓருபடிக்கு ஏற இறங்க
நோக்கி விடுப்பெடுப்பாள்.
பெட்டை உண்டான காலம்தான் சோற்றுக்கும் பஞ்சம். 
'வாப்பா'
அவருமொரு வாப்பா; 
தொந்தி வயிறன் வீட்டுக்குள் கிடப்பான்
மகள் நின்று தெருவில் எடுக்கின்றாள் நெருப்பு.

 

நிறைமதியம் கூட இவளுக்கு விலக்கில்லை

கள்ளச் சிறுக்கி 

கூந்தலுக்கு எண்ணெய்வைத்து மாதக்கணக்கிருக்கும்.

முள்முருக்கம் மிலாற்றைப்போல் மயிர்கள்.

கோரிக் கட்டி உச்சியிலே கொண்டை

இருந்தாலும் கைக்குள் அடங்காது பன்கூடை

போல கிளம்பியும் இந்தக் காப்பிலிச் சாதிக்கு

சூடில்லை, சுணையில்லை, மின்னிச் சுரை சுழன்று இருந்தாலும்

இறுக்க நேரமில்லை, நாள்முழுக்க கடப்புக்குள்

நின்று கிறுக்கத்தான் பொடிச்சிக்குப் பகல் காணும்.

 

சும்மா மூக்கோடித் திரிந்த பெட்டை

நான் பள்ளிக்குப் போகும் காலத்தில் இவள் தொடையில்

ஒரு கிள்ளுப் போட்டுவிட்டுப் போவேன். 

அரையில் ஒரு தழும்பு இவளுக்கு உண்டு. 

கீரைப் பாம்பு விளைந்த வயிற்றோடு தெரிவாள். 

 

இன்னும் நான் கலியாணம் செய்யாத கட்டை

இவளைப் பார்!

பெண்பிள்ளை வளர்த்தி யாழ்ப்பாண முருங்கைக்கு ஒத்ததுதான்.

என்னைக் கண்டாலும் இவளுக்கோர் சிலிர்ப்பு. 

பேய்ப் பெட்டை

ஆளறிந்து கொள்ளாத முன்சூத்தைப் பல்லீ.

 

முகம் கொஞ்சம் வௌிப்புத்தான்.

இடித்த மாவைப் போல இல்லாமல்

சந்தனத்தை உரைத்த நிறம்

உதட்டில் எவன் கடித்தான் ஒரு வெடிப்பு?

 

இவளுக்கு மூத்தவள்

அவளுக்கும் மூத்தவள்

ஒருத்தியுமே இவள்போல இல்லை.

கடப்புக்குள் இவள் நின்று எடுக்கின்ற நளினம்

எவன் மனதைச் சுண்டா?

 

கூசாமல் பார்ப்பாள்.

நாம் குனிந்து போனால்

இன்னும் ஓருபடிக்கு ஏற இறங்க

நோக்கி விடுப்பெடுப்பாள்.

பெட்டை உண்டான காலம்தான் சோற்றுக்கும் பஞ்சம். 

 

'வாப்பா'

அவருமொரு வாப்பா; 

தொந்தி வயிறன் வீட்டுக்குள் கிடப்பான்

மகள் நின்று தெருவில் எடுக்கின்றாள் நெருப்பு.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.