LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

விபத்துக்கள்

 

என் தோட்டத்தில் இருந்த ரோஜாவில்
நேற்று விழுந்த பூ
இரவு வந்து என்னைத் தழுவி
சுகமா என்று குசலம் விசாரித்த தென்றல் காற்று 
ஜன்னல் இடவால் என்னைப் பார்த்து சிரித்த நிலவு
நிலவோடு சேர்ந்த வெள்ளி
எல்லாமே என்னுடைய காதலியின் நினைவுகளைக்
கொண்டு வந்ததைப் போல
இன்று கந்தோரிலும் நீ வந்து மனங்கிள்ளிப் போனாய்
கிழவி....
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன்
ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும்
அள்ளி அணைத்து விளையாடக் காத்திருந்து
ஏமாந்து போன உயிர்
இந்தக் காதலியை இழந்த
கோடை காலத்தில் நான் வரண்டு கிடந்தாலும்
மாரியிலே செழித்திருந்த பயல்.
கொஞ்சம் வானம் இருண்டாலே எனக்கு வரும்
பழைய 
வெள்ளத்தின் ஞாபகங்கள்.
நீயேன் என் கரம் பிடித்து அழுதாய்?
எதற்கோ நீ அழுதாய்; எனக்குள்ளே
நூறு குயில்கள் ஒன்றாகச் செத்தனவே!
அவளும் இப்படித்தான் என் கரம் பிடித்து அழுதாள்.
அந்த வண்ணத்துப் பூச்சி இறகுதிர்ந்தபோது
தென்னைக்கு மறைவில்
அதன் உச்சிக் குலை அதிரும் சத்தத்தில்
இப்படித்தான் என் கரத்தைப் பிடித்து மடக்கி
அழுதாள்! கிழவி இன்றேன் நீயழுதாய்?
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன்.
ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் 
அள்ளி அணைத்து விளையாட காத்திருந்து
ஏமாந்து போன உயிர்.
எதற்கோ நீ அழுதாய்?
காரணத்தை அறிவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை;
ஆறேழு புகையிரதம் எனக்குள்ளே மோதினவே!

 

என் தோட்டத்தில் இருந்த ரோஜாவில்

நேற்று விழுந்த பூ

இரவு வந்து என்னைத் தழுவி

சுகமா என்று குசலம் விசாரித்த தென்றல் காற்று 

ஜன்னல் இடவால் என்னைப் பார்த்து சிரித்த நிலவு

நிலவோடு சேர்ந்த வெள்ளி

எல்லாமே என்னுடைய காதலியின் நினைவுகளைக்

கொண்டு வந்ததைப் போல

இன்று கந்தோரிலும் நீ வந்து மனங்கிள்ளிப் போனாய்

கிழவி....

 

நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன்

ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும்

அள்ளி அணைத்து விளையாடக் காத்திருந்து

ஏமாந்து போன உயிர்

 

இந்தக் காதலியை இழந்த

கோடை காலத்தில் நான் வரண்டு கிடந்தாலும்

மாரியிலே செழித்திருந்த பயல்.

கொஞ்சம் வானம் இருண்டாலே எனக்கு வரும்

பழைய 

வெள்ளத்தின் ஞாபகங்கள்.

நீயேன் என் கரம் பிடித்து அழுதாய்?

எதற்கோ நீ அழுதாய்; எனக்குள்ளே

நூறு குயில்கள் ஒன்றாகச் செத்தனவே!

 

அவளும் இப்படித்தான் என் கரம் பிடித்து அழுதாள்.

அந்த வண்ணத்துப் பூச்சி இறகுதிர்ந்தபோது

தென்னைக்கு மறைவில்

அதன் உச்சிக் குலை அதிரும் சத்தத்தில்

இப்படித்தான் என் கரத்தைப் பிடித்து மடக்கி

அழுதாள்! கிழவி இன்றேன் நீயழுதாய்?

 

நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன்.

ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் 

அள்ளி அணைத்து விளையாட காத்திருந்து

ஏமாந்து போன உயிர்.

 

எதற்கோ நீ அழுதாய்?

காரணத்தை அறிவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை;

ஆறேழு புகையிரதம் எனக்குள்ளே மோதினவே!

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.