|
|||||
விடுதலை வேள்வியில் தமிழகம் நூல் மூன்றாம் பாகம் வெளியிடப்பட்டது - மாபெரும் தொடக்கம் |
|||||
‘ விடுதலை வேள்வியில் தமிழகம் ’ நூல் மூன்று பாகங்களை உள்ளடக்கியது. இரண்டு பாகங்கள் வெளிவந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இந்நூலின் 3 ஆம் பதிப்பு தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது. 3 ஆம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்நூலின் முதல் இரண்டு பாகங்களை தமிழக மாணவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சி இப்போது முழு வீச்சோடு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக படிப்பு , பேச்சு , கட்டுரை , பொதுஅறிவு , ஓவியம் , நடிப்பு உள்ளிட்ட பல்வகைத் தனித்திறன்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் , NCC - NSS - பசுமை படை - நூகர்வோர் அமைப்பு - பிளானிங் பாரம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணியாற்றும் மாணவர்களையும் தேர்வுசெய்து அவர்களுக்கு இந்நூலைப் பரிசாக அளிக்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின்படி கரூர் - வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் 75 பேரை நிர்வாகம் 3 பேராசிரியர்கள் கொண்ட குழுவின் மூலம் தேர்வு செய்திருந்தது. அவர்களுக்கு இந்நூல் கல்லூரி நிர்வாகத்தால் பரிசாக வழங்கப்பட்டது. நூலின் மூன்றாம் பாகம் வெளியான 27.02.2022 ஆம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினரான மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் நூல் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
நூலைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் நீதியரசர் ஆர். மகாதேவன் , நூலாசிரியர் த. ஸ்டாலின் குணசேகரன் , கல்லூரித் தாளாளர் க. செங்குட்டுவன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகமெங்கும் இந்நூல் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறவும் , அவர்களின் வாசிப்புக்கு இந்நூல் வசப்படவும் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆம் ... இது ஒரு மாபெரும் தொடக்கம். மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும் , சமூக உணர்வையும் ஏற்படுத்தும் முயற்சி. அனைத்து மாணவர்களும் மக்களும் பயன்படும் விதத்தில் பள்ளி - கல்லூரி நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இந்நூலை இடம்பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
|
|||||
by Swathi on 13 Mar 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|