LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

விடுதிகள் அமைத்துக் கட்டிக்காத்த கல்வி

 விடுதலை இயக்கப்பணிகளுக்காகப் பல இடங்களுக்குச் செல்லும் போது அங்கெல்லாம் கல்வி இல்லா நிலையையும் , கல்வி கற்க ஆர்வமிருந்தும் படிக்க வசதி இன்மையால் வாடும் குழந்தைகளையும் கண்ட கக்கன் , 1940-41 ஆம் ஆண்டு பள்ளி மாணவர் , மாணவியர் விடுதியைத் தொடங்கினார் .

விடுதலைப் போர் தீவிரமாக இருந்த காலமாதலால் விடுதியைக் கண்காணிக்கத் திரு . செல்லப்பா அவர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டார் . ஐந்து மாணவிகள் என்ற அளவில் தொடங்கி , நன்கொடை வழங்கும் பேருள்ளம் கொண்ட பெரியோர் பலரின் உதவியால் அந்த விடுதியை நடத்தி வந்தார் . கக்கனின் தோழர்களான மதுரை மேலூர்த் தங்கச்சாமிஅம்பலம் , கருப்பண்ணஅம்பலம் , கீழையூர் மோ . மா . ஆகியோர் உதவியோடு ஏற்பாடு செய்திருந்த அரசாங்க கட்டடத்தின் தாழ்வாரத்தில் அவ்விடுதி தொடங்கப்பட்டது . மதுரைமேலூர் பார்ப்பன மக்கள் வாழும் அக்கிரகாரத்தில் தொடங்கப்பட்டதால் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன . அரிசன இனமாணவர்கள் அக்கிரகாரத்தில் வாழ்வதா ? என்று அவ்வட்டார மக்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர் . தோழர்கள் உதவிக்கரம் நீட்ட எதிர்ப்புகள் நசிந்து போயின என்றாலும் , நன்கொடை பெறுவதில் பல இடையூறுகள் இருந்தன .

திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியை விடுதிப்பணிகளில் ஈடுபடுத்தினார் கக்கன் . பல நாள் கடன் வாங்கி பிள்ளைகளுக்கு உணவளித்தார் என்ற செய்தி பலரையும் வியக்க வைத்தது . அதனால் , அரிசன சேவாசங்க நிதியுதவியைப் பெற்று விடுதியை நடத்த வேண்டியதாகி விட்டது . சில பிள்ளைகளை மட்டுமே கொண்டு தொடங்கிய விடுதி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் விடுதியாக வளர்ந்துள்ளது .

இன்றுவரை அரிசன சேவாசங்க நிதியுதவியுடன்தான் நடந்து வருகிறது . இப்படிக் கக்கன் அளித்த கல்விக் கொடைக்கு ஈடுஇணை ஏதுமுண்டோ ?

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.