ராஜா ராணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ விஜயின் 59 வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ராஜா ராணியைப் போலவே, விஜயின் 59 வது படமும் குடும்பப்படம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். சமீபத்தில் தேசிய விருது பெற்ற உத்தரா உன்னிகிருஷ்ணன் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இதன்மூலம் படத்தில் ஒரு குழந்தையின் கேரக்டர் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது அடுத்த தகவலாக விஜய் இந்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் புலி படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்துவிட்ட நிலையில் விஜய் குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க ஐரோப்பா செல்லவிருக்கிறாராம். அங்கிருந்து திரும்பியவுடன் புலி படத்தின் டப்பிங் மற்றும் அட்லீ படம் என ஒரே நேரத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் 59வது படமான இதில் சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.
படத்தின் படபிடிப்புகள் அனேகமாக ஜூலை மாதம் துவங்கலாம் எனத் தெரிகிறது.
|