கத்தி படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதிப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை நட்டி நட்ராஜ் கவனிக்கவுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தை விஜயின் பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் படபிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த செட்டில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று 100 வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.
தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
|