கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இந்த படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு முதலில் மாரீசன் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தாலும் அந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விஜய் 58 படத்துக்கு கருடா என்று தலைப்பு சூட்டப்பட்டடிருப்பதாகவும், ஜனவரி 1 அன்று அதிகாரபூர்வமாக தலைப்பை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் கோலிவுட் வட்டாரத்தை பரவி வருகிறது.
இரண்டு வித்தியாசமான காலகட்டங்களில் நடைபெறும் கதையாக இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
|