சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மாரீசன், கருடா, மருதீரன் என பெயர்கள் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகினாலும், படக்குழு அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
சமீபகாலமாக அதிரடி ஆக்சன் படங்களாக நடித்து வரும் விஜய், இந்த படம் சரித்திர பின்னணி கொண்டது என்பதால், இரண்டில் ஒரு வேடத்தில் அரசர் கெட்டப்பில் வருகிறாராம். அப்படி அவர் தோன்றும் அந்த காட்சிகள் முந்தைய ஜென்மத்தில் அவர் ராஜாவாக ஆண்ட காலகட்டத்தில் நடக்கிறதாம்.
அதனால் முதன்முறையாக ராஜா கெட்டப்பில் காஸ்டியூம் அணிந்து நடிக்கும் விஜய், வாள் சண்டையும் போடுகிறாராம். அந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதேவி, ஹன்சிகா இடம்பெறும் காட்சிகளும் வருகிறதாம். அதனால் அவர்களும், ராணி, இளவரசி கெட்டப்பில்தான் நடிக்கிறார்களாம்.
இதனை தொடர்ந்து, நிகழ்கால கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் விஜய், இந்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
|