விஜய் சேதுபதி நடித்து ஹிட் ஆனா படங்களில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும் ஒன்று.
இந்த படத்தை கோகுல் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம் ரசிகர்களிடையேயும், சினிமா விமர்சகர்களிடையேயும் பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது.
இதனை தொடர்ந்து இயக்குனர் கோகுல், கார்த்தி, நயன்தாரா நடிக்கும் காஸ்மோரா என்ற படத்தின் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் விஜய்சேதுபதியும், இயக்குனர் கோகுலும் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார்களாம். சமீபத்தில் விஜய்சேதுபதியின் வீட்டில் நடைபெற்ற ஒரு விழாவின் போது, புதிய படம் குறித்து இருவரும் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த புதிய படத்தையும் இதற்கத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியிலேயே உருவாக்கலாமா எனவும் யோசித்திருக்கிறார்களாம்.
ஆரஞ்சு மிட்டாய், நானும் ரௌடிதான், புறம்போக்கு, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு கோகுலின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
|