பண்ணையாரும் பத்மினியும் படத்தை தொடர்ந்து, இயக்குனர் எஸ்.யூ.அருண்குமாரும், நடிகர் விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இணைய இருக்கிறார்கள்.
இந்த படத்தை முதல் முறையாக வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் மூலம் முதன் முறையாக போலீஸ் அவதாரம் எடுக்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - தினேஷ்கிருஷ்ணன் / இசை - நிவாஸ்.கே.பிரசன்னா, படத்தொகுப்பு - ஸ்ரீகர்பிரசாத் / கலை - பாலசந்தர், சண்டை - அன்பறிவ் ( அன்பு & அறிவு ) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களும் இனணந்து பணியாற்ற உள்ளனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ள இப்படத்தின் ப்ரீ புரடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’, படம் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. மேலும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்புகளும் முடியும் தருவாயையை எட்டியுள்ளது. இப்படத்தையடுத்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
|