பத்து எண்றதுக்குள்ளே படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் வெளியான ஐ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், விக்ரமின் நடிப்பு அந்த படத்தில் பாராட்டப் பட்டது. இதனைத் தொடர்ந்து, விக்ரமைத் தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் அவர் படங்களையும், இயக்குனர்களையும் தேர்வு செய்வதில் கனமாக உள்ளாராம்.
இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும், அரிமா நம்பி படம் போவே இந்த படமும் ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் இயக்குனருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
|