LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

விளக்கு - இல. பிரகாசம்

தன்னை உருக்கி உருக்கி
இருளில் ஒளிதரும் விளக்கே
உன்னைப் போல் மனமில்லை
சுயநலம் பிடித்துக் கொண்ட
மனிதரிடம்.இ காரணம் தெரியுமா?
உனக்குச் சதி செய்ய தெரியாது.
அவனுக்கு தெரிந்தது ஒன்றே
சதி மட்டுமே!
நீயும் அவனும் ஒன்று
உன்னைச் சுற்றி வரும்
விட்டிலை விழுங்குகிறாய்- நீ
அவன் தன்னை
நம்பியிருக்கும் சமூகத்தை
விழுங்குகிறான்!
நீயும் அவனும் வேறு
விட்டிலை விழுங்கினாலும்
ஒளியையாவது தருகிறாய்-நீ
அவன் ஒளி தருகிறேன்
எனக் கூறி
சமூகத்தை இருட்கடலில் அல்லவா
தள்ளிவிட்டான் அந்தோ!
புவியிருளை நீக்கும் -நீ
அவன் கல் மனத்தையும்
கசிந்துருக்கி  அவன் உள்ளிருளான
அறியாமையை நீக்கு.
அறிவொளிச் சுடரை அவன்
மனத்தினுள் வீசு!.!
-இல. பிரகாசம்

by Swathi   on 25 Feb 2016  2 Comments
Tags: Vilakku   Vilakku Kavithai   விளக்கு              
 தொடர்புடையவை-Related Articles
விளக்கு.. - வித்யாசாகர் விளக்கு.. - வித்யாசாகர்
உயிர் விளக்கு..  - வித்யாசாகர்! உயிர் விளக்கு.. - வித்யாசாகர்!
விளக்கு  - இல. பிரகாசம் விளக்கு - இல. பிரகாசம்
இரவில் தூங்கும் போது இரவு விளக்கு பயன்படுத்தலாமா? ஹீலர் பாஸ்கர் இரவில் தூங்கும் போது இரவு விளக்கு பயன்படுத்தலாமா? ஹீலர் பாஸ்கர்
விளக்கேற்ற உகந்த நேரம் எது ? விளக்கேற்றும் முன், விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை எவை ? விளக்கேற்ற உகந்த நேரம் எது ? விளக்கேற்றும் முன், விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை எவை ?
கருத்துகள்
25-Feb-2016 21:07:03 PRAKASH said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி ,
 
25-Feb-2016 21:05:21 மகேந்திரன் said : Report Abuse
நன்று
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.