|
|||||
விரத், ரோஹித்தின் அதிரடியால் இந்தியா வெற்றி !! |
|||||
இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக, பிராவோ 59 ரன்களும், சார்லஸ் 42 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 86 ரன்களும், ரோகித் சர்மா 72 ரன்களும் எடுத்தனர். தவான் 5 ரன்களிலும், ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். யுவராஜ் 16 ரன்னுடனும், டோனி 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
சாதனை துளிகள் :
இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா, 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் விரத் கோலி, 81வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டியில் 5000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 120 போட்டியில் (114 இன்னிங்ஸ்), 17 சதம், 27 அரைசதம் உட்பட 5005 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்சின் (126 போட்டி, 114 இன்னிங்ஸ்) சாதனையை சமன் செய்தார்.
இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக, பிராவோ 59 ரன்களும், சார்லஸ் 42 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 86 ரன்களும், ரோகித் சர்மா 72 ரன்களும் எடுத்தனர். தவான் 5 ரன்களிலும், ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். யுவராஜ் 16 ரன்னுடனும், டோனி 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
சாதனை துளிகள் :
இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா, 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் விரத் கோலி, 81வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டியில் 5000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 120 போட்டியில் (114 இன்னிங்ஸ்), 17 சதம், 27 அரைசதம் உட்பட 5005 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்சின் (126 போட்டி, 114 இன்னிங்ஸ்) சாதனையை சமன் செய்தார்.
|
|||||
by Swathi on 21 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|