மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானத்தில் பாலாஜியும், முருகப்பெருமானும் அருள்பாலிக்கிறார்கள்.மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானம்
பாலாஜிக்கும், முருகப்பெருமானுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீள மகா மண்டபம் கட்டப்பட்டது. முருகனின் முன்னால் 2 மயில் வாகனங்கள்
அமைக்கப்பட்டன.மேல் கருவறையில் 3 அடி உயர முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். கீழ்தள கருவறையில் பாலாஜி
என்ற வெங்கடேசப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இந்த கோயிலுக்கென்று திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து
குடை, சடாரி ஆகியவை பூஜிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தை ஸ்கந்தசமாஜ் என்ற குழுவினர் கவனிக்கின்றனர். சங்கடஹர
சதுர்த்தியில் மகா கணபதி ஹோமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, சஷ்டி திதியன்று முருகனுக்கும், வேலுக்கும் விசேஷ திரவிய அபிஷேகம்,
வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமா துர்காவுக்கு ராகுகால பூஜை, சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு மாலை நேர அர்ச்சனை, வியாழக்கிழமைகளில்
தெட்சிணாமூர்த்தி அர்ச்சனை, வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிடுதல் ஆகியவை குறிப்பிடும்படியாக நடக்கின்றன.
மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானத்தில் பாலாஜியும், முருகப்பெருமானும் அருள்பாலிக்கிறார்கள். மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானம் பாலாஜிக்கும், முருகப்பெருமானுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீள மகா மண்டபம் கட்டப்பட்டது. முருகனின் முன்னால் 2 மயில் வாகனங்கள் அமைக்கப்பட்டன.மேல் கருவறையில் 3 அடி உயர முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.
கீழ்தள கருவறையில் பாலாஜி என்ற வெங்கடேசப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இந்த கோயிலுக்கென்று திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து குடை, சடாரி ஆகியவை பூஜிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது.கோயில் நிர்வாகத்தை ஸ்கந்தசமாஜ் என்ற குழுவினர் கவனிக்கின்றனர்.
சங்கடஹர சதுர்த்தியில் மகா கணபதி ஹோமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, சஷ்டி திதியன்று முருகனுக்கும், வேலுக்கும் விசேஷ திரவிய அபிஷேகம், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமா துர்காவுக்கு ராகுகால பூஜை,சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு மாலை நேர அர்ச்சனை, வியாழக்கிழமைகளில் தெட்சிணாமூர்த்தி அர்ச்சனை, வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிடுதல் ஆகியவை குறிப்பிடும்படியாக நடக்கின்றன. |