ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.இத்தலத்தின் மிகவும் விசேசம் இங்கு அருள் பாலிக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் இவரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தருவார். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு. |