வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன்
தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.இங்கு முக்கியத் திருவிழா
பாரி வேட்டை, துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு ரணபலி வழங்கவும் வருடம்
ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இதற்காக நடத்தப்படும் பாரிவேட்டை திருவிழா இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.இத்திருவிழா
மாசி மாதம் அமாவாசையை ஒட்டி 3 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சித்திரை திருவிழா. இதைஒட்டி காவடி பூஜை
நடத்தப்படுகிறது.அந்நாளில் வைகுண்டமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்திலும், அம்மன்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலும், நடராஜர்
சிவகாமியம்மன் ஒரு பல்லக்கிலும் கோயிலை வலம் வந்து காட்சியளிப்பர். இது தவிர மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் எழுச்சியோடு
கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன் தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.இங்கு முக்கியத் திருவிழா பாரி வேட்டை, துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு ரணபலி வழங்கவும் வருடம் ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம்.
இதற்காக நடத்தப்படும் பாரிவேட்டை திருவிழா இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இத்திருவிழா மாசி மாதம் அமாவாசையை ஒட்டி 3 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சித்திரை திருவிழா. இதைஒட்டி காவடி பூஜை நடத்தப்படுகிறது. அந்நாளில் வைகுண்டமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்திலும், அம்மன்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலும், நடராஜர் சிவகாமியம்மன் ஒரு பல்லக்கிலும் கோயிலை வலம் வந்து காட்சியளிப்பர். இது தவிர மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது. |