LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருகை!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்து உள்ளனர்.

இவர்கள், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு,  3 நாட்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட  இடங்களை ஆய்வு செய்கின்றனர். அவர்கள் அறிக்கை அளித்த பிறகுதான் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான `கஜா’’  கரையை கடக்கும்போது 120 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.  புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான நிதியை கேட்டு பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை புள்ளி விவரங்களுடன் பிரதமரிடம் மனுவாக அளித்தார். மேலும், இந்த புயல் நிவாரண நிதிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக புனரமைப்புக்காக உடனடியாக ரூ.1,500 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதேபோன்று, புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் உடனடியாக மத்திய குழுவை புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பார்வையிட உத்தரவிட்டு உள்ளார்.

7 பேர் கொண்ட மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். டேனியல் ரிச்சர்ட் (மத்திய உள்துறை இணை செயலாளர்) தலைமையில் கவுல் (மத்திய நிதித்துறை ஆலோசகர்), ஸ்ரீ வத்சலா (மத்திய வேளாண்மை துறை இயக்குனர்), மானிக் சந்திரா பான்ட் (மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர்), வந்தனா சிங்ஹால் (மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர்), ஹர்ஷா (மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குனர்), இளவரசன் (மத்திய போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர்) ஆகிய 7 பேர் கொண்ட குழு, டெல்லியில் இருந்து உடனடியாக சென்னை வர உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை, தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். 

இந்த ஆலோசனையின்போது, மத்திய குழுவுக்கு `கஜா’’ புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கி கூறப்படும். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிடுவார்கள். 

அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர்கள் நேரில் சந்தித்து பேசுவார்கள். தொடர்ந்து 3 நாட்கள் அதாவது 26ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்யும்
இதைத் தொடர்ந்து வருகிற 27ம் தேதி மத்திய குழுவினர் மீண்டும் சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அப்போது, முதல்வர், புயல் பாதிப்பு குறித்த விளக்கமாக ஒரு மனுவை மத்திய குழுவிடம் மீண்டும் வழங்குவார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மத்திய குழுவினர் டெல்லி திரும்புவார்கள். டெல்லி, சென்று புயல் பாதிப்பு குறித்த தங்களது விளக்கமான அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் வழங்குவார்கள். அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பு மற்றும் நிரந்தர புனரமைப்புக்கான நிதியை பிரதமர் மோடி வழங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.