அவ்வுழி அவ்வுழிப் பெய்உணவு உன்னி முகன்பெறும் இருசெயல் அகன்பெறக் கொளுவும் புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி (5)
பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும் பேழ்வாய்ப் புலிஉகிர் சிறுகுரல் விளங்க அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டிப் பழம்கோள் தத்தை வழங்குசொல் போலும் மழலைக் கிளவியும் இருநிலத்து இன்பமும் (10)
ஒருவழி அளிக்கும் இருங்கதிர்ச் சிறுவனை தழல்விழி மடங்கல் கொலைஅரிக் குருளையைப் பொன்மலை கண்ட பொலிவு போல மணிகெழு மார்பத்து அணிபெறப் புகுதலின்
கறங்கிசை அருவி அறைந்துநிமிர் திவலையும் (15) துருத்திவாய் அதுக்கிய குங்குமக் காண்டமும் குறமகார் கொழிக்கும் கழைநித் திலமும் நெடுநிலை அரங்கில் பரிபெறு தரளமும் புனம்பட எறிந்த கார்அகில் தூமமும் அந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும் (20)
வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும் கந்திவிரி படிந்த மென்சிறை வண்டும் சந்தனப் பொங்கர்த் தழைச்சிறை மயிலும் முன்றில்அம் பெண்ணைக் குடம்பைகொள் அன்றிலும் ஒன்றி னொடு ஒன்று சென்றுதலை மயங்கும் (25)
குளவன் குன்றக் கூடல்அம் பதிநிறை மஞ்சடை குழல்பெறு செஞ்சடைப் பெருமான் அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் வாவியில் கேட்ட காவிஅம் களத்தினன் திருக்கண் கண்ட பெருக்கினர் போல் (30)
முளரிஅம் கோயில் தளைவிட வந்து நல்லறம் பூத்த முல்லைஅம் திருவினள் நின்உளத்து இன்னல் மன்அறக் களைந்து பொருத்தம் காண்டி வண்டாரும் அருத்திஅம் கோதை மன்னவன் பாலே. (35)
|