LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பழநிபாரதி

நாங்கள் பேசத் தொடங்கிவிட்டோம்

பேசத் தொடங்கிவிட்டோம் 
எங்கள் வார்த்தைகள் 
நாறத்தான் செய்யும் 

வாய் நாற்றமல்ல அது 
வலுக்கட்டாயமாய் எம் 
வாய்திறந்து ஊட்டிய 
உங்கள் ஆணவ மலத்தின் 
துர்நாற்றம் 

நாங்கள் 
உங்கள் நிலங்களை 
உழுதோம் 

நீங்கள் 
எங்கள் பசியை 
அறுவடை செய்தீர்கள்

அந்த நிலமும் 
எங்களுடையதுதானென்பது 
அப்போது எங்களுக்குத் தெரியாது

உங்கள் அடுப்புகள் எரிய 
விறகுகள் வெட்டினோம் 

நீங்கள் 
எங்கள் குடிசைகளை 
எரித்தீர்கள்

கோடரிகளும் ஆயுதமென்பதை
அப்போது நாங்கள் 
அறிந்திருக்கவில்லை 

உங்கள் பெண்களின் 
தீட்டுத் துணிகளையும் 
துவைத்துக்கொடுத்தோம் 

நீங்கள் 
எங்கள் பெண்களின் 
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்

அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று 

வாழ்வின் 
கூட்டல் கழித்தல் கணக்குப் போட
எங்கள் முதுகு உங்களுக்குக்
கரும்பலகையானது

அப்போது எங்களுக்கு 
எழுதப் படிக்கத் தெரியாது 

இப்போது நாங்கள் 
படிக்கத் தொடங்கிவிட்டோம் 
எழுத்துக்களைக் கூட்டி மட்டுமல்ல 
எங்களையும் கூட்டி 

செத்துப்போன 
மாட்டின் தோலையும்
அதிர...அதிர 
நியாயம் கேட்கவைக்கும் 
பறையின் குரல் 
எங்களுடையது 

நாங்கள்
பேசத் தொடங்கிவிட்டோம்

by Swathi   on 25 Feb 2014  1 Comments
Tags: Start Speak   Start Speak Poet   Pesath Thodankiviten   பேசத் தொடங்கிவிட்டேன்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
10-Mar-2021 02:52:41 மு குமார் said : Report Abuse
பறை அறைந்து சொல்லிய கவிதை எங்களின் நிர்வாணங்களை கிழித்து போட்டீர் சிறப்பு ஐயா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.