LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

உங்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும் ?

முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில் சிக்மன் பிரோயேட் கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் . பிரோயேட் இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார் மின்சாரம் புதிது .


அவருக்கு அது பற்றி பயம் .ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார். படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .விளக்கு அணையவில்லை .


விளக்கை அணைப்பதற்கு பிரோயேட் எழுப்பி கேட்கலாம். ஆனால் அவர் மிகவும் மட்டமாக கருதிவிடலாம். ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார். காலையில் பிரோயேட் வந்ததும்


“என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் .


“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் .


பிரோயேடிக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சார பயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது 


”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச், இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் என்றார்.


“பட்டனை தட்டினால் போதுமா, இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் .


மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ? பட்டனை தட்டுவது தன் தெரியும் .


அன்பை, காதலை பற்றி என்ன தெரியும் ?


உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து. அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா? 


யோசித்து பாருங்கள் 


.எதுவும் தெரியாது. 


உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது 


.உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .


வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது 


.அனாதிகாலமாக இந்த இருப்புலகத்தில் தான் நீங்கள் மையம் கொண்டு உள்ளீர்கள் ..


தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும் 


உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் ,


மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் . 


மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ?


கோபம் எங்கிருந்துவருகிறது ? 


அதன் உற்பத்தி களம் எங்கே ? 


எதுவும் தெரியாது .


ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் .


ஏன்?


என்னதான் நடைபெறுகிறது ?


அதன் ஆரம்ப புள்ளி எங்கே ?


அதன் ஆதாரசுரிதி எங்கே ? 


உங்களுக்கு தெரியாது .


உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின் 


இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில் 


நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை


அறிந்துகொள்ள முடியும் ?


உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால் 


அப்போது இந்த வாழ்வின் அத்தனை இரகசியத்தையும் நீங்கள் உணர முடியும் .


நன்றி : ஓசோ - தமிழ் 

by Swathi   on 20 Nov 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.