|
||||||||
உங்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும் ? |
||||||||
முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில் சிக்மன் பிரோயேட் கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் . பிரோயேட் இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார் மின்சாரம் புதிது . அவருக்கு அது பற்றி பயம் .ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார். படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .விளக்கு அணையவில்லை . விளக்கை அணைப்பதற்கு பிரோயேட் எழுப்பி கேட்கலாம். ஆனால் அவர் மிகவும் மட்டமாக கருதிவிடலாம். ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார். காலையில் பிரோயேட் வந்ததும் “என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் . “எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் . பிரோயேடிக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சார பயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது ”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச், இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் என்றார். “பட்டனை தட்டினால் போதுமா, இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் . மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ? பட்டனை தட்டுவது தன் தெரியும் . அன்பை, காதலை பற்றி என்ன தெரியும் ? உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து. அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா? யோசித்து பாருங்கள் .எதுவும் தெரியாது. உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது .உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது . வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது .அனாதிகாலமாக இந்த இருப்புலகத்தில் தான் நீங்கள் மையம் கொண்டு உள்ளீர்கள் .. தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும் உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் , மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் . மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ? கோபம் எங்கிருந்துவருகிறது ? அதன் உற்பத்தி களம் எங்கே ? எதுவும் தெரியாது . ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் . ஏன்? என்னதான் நடைபெறுகிறது ? அதன் ஆரம்ப புள்ளி எங்கே ? அதன் ஆதாரசுரிதி எங்கே ? உங்களுக்கு தெரியாது . உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின் இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில் நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை அறிந்துகொள்ள முடியும் ? உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால் அப்போது இந்த வாழ்வின் அத்தனை இரகசியத்தையும் நீங்கள் உணர முடியும் . நன்றி : ஓசோ - தமிழ் |
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|