LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வீட்டை இடித்த போது சிலைகள் கண்டுபிடிப்பு- தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க முடிவு!

வீட்டை இடித்த போது கிடைத்த சிலைகள் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் மேலகுட்டி கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவர் அடிவாரம் மேலகுன்னுபட்டி, கீழகுன்னுபட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஜோதிடம் மற்றும் சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு பின் இவரது மகன் சந்தானகிருஷ்ணன் சொந்த ஊரிலிருந்து தர்மபுரிக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்.25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடு பூட்டியே கிடந்தது. இந்த நிலையில்  2 மாதங்கள் முன்பு துறையூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் அந்த வீட்டை விலைக்கு வாங்கினார்.

வீடு சிதிலமடைந்து இருந்ததால் வீட்டை இடிக்க முடிவு செய்தார். வீட்டை இடித்தபோது வீட்டிற்கு அடியில் இருந்து இரு அடி உயரமுள்ள முழுவதும் கல்லால் செய்யப்பட்ட ராஜா, ராணி போன்ற இரு சிலைகளும், சிறு சிறு ஐம்பொன் சிலைகளும், மரத்தாலான சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்தன.

2 கற்சிலைகளுக்கும் தலை இல்லை. சிலைகளை துறையூர் தாசில்தார் ரவிசங்கரிடம் ஒப்படைத்தார். தாசில்தார் இதுபற்றி கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். இந்த சிலைகள் அனைத்தும் தொல்லியல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 21 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.