|
|||||
சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை சாப்பிடுவதுதான் சிறந்ததா !! |
|||||
![]() பச்சரிசியை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடனடியாக நமது ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான், மருத்துவர்கள், உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை உண்ணக் கூடாது. ஏனெனில், பச்சரிசியில் உள்ள சர்க்கரை, சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் விரைவாக பரவும் தன்மை கொண்டது.
எனவே நிரிழிவு நோயாளிகள் பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியை சாப்பிடுவது நல்லது. புழுங்கல் அரிசியில் உள்ள சர்க்கரை மெதுவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. இந்த நிறம் தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துகள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கூடுதாலக் கிடைக்கின்றன.
முன்பெல்லாம் நெல்லை அவிக்கும் முன் நீரில் கொட்டி நன்றாக ஊற வைப்பார்கள். அதன் பின்பு ஊறிய நெல்லை அவிக்கும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைப்பார்கள். இப்போதெல்லாம் நெல்லை நேரடியாக நீராவியில் வேக வைக்கும் முறை வந்து விட்டது. அதனால் ஊற வைக்கும் போது வீணாகும் உயிர்ச்சத்து. இப்போது நீராவியில் வேக வைப்பதால் முழுவதுமாக கிடைக்கின்றன, இந்த முறையில் இன்னும் கூடுதலாக உயிர்ச்சத்துக்கள் புழுங்கல் அரிசிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் தான், சர்க்கரை நோயளிகள் பச்சரி சாப்பிடுவதை விட புழுங்கல் அரிசி சாப்பிடுவது மேலானது. |
|||||
by Swathi on 18 Nov 2013 1 Comments | |||||
Tags: சர்க்கரை நோயாளிகள் நீரிழிவு நோய் பச்சரிசி புழுங்கல் அரிசி Brown Rice White Rice Diabetic Patient | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|