|
||||||||
வேதாத்திரிய சிந்தனைகள் : - |
||||||||
நான் யார் என்றே வினவ நல்லுடலும், உயிர், அறிவு நல்லினைப்பியல்பாய்க் கூடியொரு நாட்டமுடனே ஒலிக்கும் ஊன்உடலே வாகனமாம் உள்ளியங்கும் ஆற்றல் உயிர் ... வான்கடந்த மெய்ப்பொருளே வாலறிவாம் அதுவே நான்.
-வேதாத்திரி மகரிஷி
" நான் யார் ", மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இக்கேள்வி கேட்டு விடைகான வேண்டியது அவசியம். அப்போதுதான் பிறவியின் நோக்கம் நிறைவுபெறும். ஆனால் நாம் " நீ யார் " என்ற கேள்வியையே எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு ஒரு பலனும் இல்லை. பஞ்சபூதங்களால்தான் எல்லா தோற்றங்களும் உயிர்களும் உருவாகி இருக்கின்றன. அப்படியானால் நாம் (மனிதன்) பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டவர்களே. பஞ்சபூதங்களுக்கு மூலம் விண். விண்ணுக்கு மூலம் சுத்தவெளி. வெளி என்பதுதான் அனைத்துக்கும் மூலம். இதுவே தெய்வம். கடவுள். அப்படியானால் நாம் அனைவருமே கடவுள்தான். உண்மை. இறைநிலையே உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இனைந்து மனிதனாக வந்துள்ளது. உயிரை தாங்கும் வாகனமாக உடல் செயல்படுகிறது. அனைத்தையும் இயக்கிகொண்டும், அறிந்துகொண்டும், வழிநடத்துவது அறிவு ஆகும். நமக்குள் எல்லாமாக இறைநிலையே இருந்தாலும் அறிவே சிறப்பாக இயங்குவதால் '' அறிவே நான் ''. எனவே அறிவே தெய்வம்.
|
||||||||
by Swathi on 14 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|