நமது நாட்டை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் உலக சுகாதார அமைப்பால் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 11-வது நாடு இந்தியாவாகும்.
இதற்கான சான்றிதழை உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.
அப்போது பேசிய குலாம் நபி ஆசாத், போலியோ ஒழிப்பில் அரசுடன் இணைந்து பாடுபட்ட உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். போலியோவை ஒழிக்க 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுக்களும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கண்காணிப்பாளர்களும் இரவு பகலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைந்துள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
|