LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்

 

கணவன்-மனைவி, அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் எனப்படுகிறது. பொருள் ஈட்டும் திறன் வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக நிறைவாக நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களால் (பெற்றோர்) பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள்தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அதைக் குழந்தைகளும் முதியோர்களும் கூடித் துய்த்துக் குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர் மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும்போது அதைத்தான் குடும்பம் எனகிறோம்.
குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் வருப்பங்களையும் மற்றவ் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை, கணவன்-மனைவி இருவருமே உயிர்பால் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இனபமும் அமையும்.
அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளை பொறுப்போடு நிறைவேற்றவும் ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்றவகையில் கல்வி, ஒழுக்கம், தொழில், திறன், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் கடமை. இதை உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நமது பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உரிய மதிப்போடு வைத்துக் கொள்வதால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அமையப்பெறுகிறது.
மனிதனுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதிர்வு என்பது இயற்கை நியதி. அதனால் இதை உணர்ந்து தனி மனிதனாக வாழ்வது அரிது. இதனால் உலகில் வாழ்வதற்கு குடும்பம் மிக இன்றியமையாததாகிறது.
                                                                           
                                                                                                -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கணவன்-மனைவி, அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் எனப்படுகிறது. பொருள் ஈட்டும் திறன் வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக நிறைவாக நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களால் (பெற்றோர்) பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள்தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அதைக் குழந்தைகளும் முதியோர்களும் கூடித் துய்த்துக் குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர் மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும்போது அதைத்தான் குடும்பம் எனகிறோம்.

குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் வருப்பங்களையும் மற்றவ் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை, கணவன்-மனைவி இருவருமே உயிர்பால் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இனபமும் அமையும்.

அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளை பொறுப்போடு நிறைவேற்றவும் ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்றவகையில் கல்வி, ஒழுக்கம், தொழில், திறன், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் கடமை. இதை உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நமது பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உரிய மதிப்போடு வைத்துக் கொள்வதால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அமையப்பெறுகிறது.

மனிதனுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதிர்வு என்பது இயற்கை நியதி. அதனால் இதை உணர்ந்து தனி மனிதனாக வாழ்வது அரிது. இதனால் உலகில் வாழ்வதற்கு குடும்பம் மிக இன்றியமையாததாகிறது.                                                                                                                                                                           -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 18 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.