கேரளாவில் அரசு துறையில் பணியாற்ற மலையாளம்(Malayalam) கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். இது பற்றி உம்மன்சாண்டி(Oommen Chandy) கூறியதாவது, கேரளாவில் அரசு வேலைக்கு மலையாளம்(Malayalam) தெரிந்தவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு மலையாள அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து அரசு வேலைக்கு மலையாள மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் எந்த மாற்றமும் மேற்கோள்ளப்படாது என அவர் தெரிவித்தார்.
|