LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : பனி காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் – 36

முன் பனி மற்றும் பின் பனி என்ற இரண்டு காலங்களிலும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் அவற்றைத் தொகுத்து இவ்வாரம் பார்க்கலாம். அதாவது மார்கழி மாதம் முதல் பங்குனி மாதம் வரை (Mid December to Mid April) நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை இங்கு பார்க்கப் போகின்றோம்.

இக்காலத்தில் மக்களின்  உடல் வலிமை மிகுந்திருக்கும் என சித்தர் பாடல் தெரிவிக்கின்றது.

    “ முன் பனி பொழ்தில் முழுவுரம் மக்களுறுவர்
       துன்னு குளிர் தோலின் துளை மெய்யில் – மன்னுபவ
       வாயில்களெல்லாம் வலியச் சுருக்கி மூடும்
       ஆயிடுமுட் சூடு அதிகமாய்”


உடல் வலிமை மிகுந்த போதும் தோலினுடைய நுண் துளைகளெல்லாம் மூடிவிடுவதால் உடலின் உட்சூடு அதிகமாகும் என இப்பாடல் தெரிவிக்கின்றது.

இக்காலங்களில் கீழ்க்காற்றும் (கொண்டல்) தென் கீழ்க்காற்றும் காற்றும் (உலவை) வீசும். இதனால் சூழல் மிகுந்த குளிர்ச்சியுடன் இருக்கும்.

இந்தக் குளிர்ச்சியின் காரணமாக உடல் சூடு கூடும் எனப் பார்த்தோம். இந்த சூடு பசியினை அதிகப்படுத்தும். போதுமான ஊட்டம் (உணவு) உடலிற்குக் கிடைக்காவிடில் அதிகமாகியிருக்கக் கூடிய சூடு ஏழு உடற் கட்டுக்களினையும் பாதிக்கத் தொடங்கும். இதனால் உடல் மெலிவும் உடல் வலிமைக் குறைவும் ஏற்படும்.

பொதுவாகவே பனிக் காலங்களில் இரவு காலம் (இருள் நேரம்) அதிகரித்திருக்கும். இக்காலங்களில் அதிகாலை எழுவது பல நன்மைகளை உண்டாக்கும். அவற்றில் காலை விரைவாகப் பசியாறுதல் (உணவருந்தல்) மிகவும் முக்கியமானதாகும். இதனால் உடல் ஊட்டம் குறையாமல் பாதுகாக்கப் படும்.

பனி காலங்களில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்

1. இக்காலங்களில் வீசும் குளிர் காற்றிலிருந்து உடலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பட்டு, கம்பளம், துப்பட்டி போன்றவற்றில் ஒன்றை உறங்கும் போது போர்த்த வேண்டும் என சித்தர் நூல்கள் கூறுகின்றன. மேலும் ஒரு பாடல்

“குளிர் மிகுந்த குன்றில் குகைகளிலும் கூசும்
நளிர் மிகுந்த நாட்டில் நலமே ஒழிந்து
நிலவறையில் நீணா நெருப்பில் நனிக்காய்ந்
துலவுவர் சித்த ருணர்”   எனக் கூறுகின்றது.


இந்தக் காலத்தின் இரவு வேளைகளில் நிலவறையில் (பூமி மட்டத்திற்குக் கீழ் உருவாக்கப்பட்ட அறையில்) நெருப்பு உருவாக்கி அங்கு தங்க வேண்டும்.

2. அதிகாலை 4.30 மணிக்குள் துயில் எழுதல் வேண்டும்.

3. வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் செய்தல் வேண்டும். இந்தக் காலத்தில் உடலில் வளி ஆற்றல் (வாதம், வாயு) கூடி மூட்டு வலிகள், மூட்டுத் தளர்ச்சி ஏற்படுத்தும். இதனைத் தடுக்க நொச்சித் தைலம், சுக்குத் தைலம் போன்ற எண்ணெய்களைக் கொண்டு (சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்) உடலில் அழுத்தித் தேய்த்துக் குளிக்க வேண்டும். அல்லது நல்லெண்ணெய்யுடன் மிளகு, சீரகம் போட்டுக் காய்ச்சிக் கொண்டு பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியல் செய்த அன்று உடலிற்கு நறுமணப் புகையூட்டிக் (சாம்பிராணிப் புகை) கொள்ளல் வேண்டும்.

4. இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு ஆகிய நான்கு சுவையுடைய பொருட்களை உட்கொள்வதால் இந்தக் காலத்தின் மாறுபாடுகளால் உடல் பாதிப்படையாமல் பாதுகாக்கப் படும். உளுந்து, பாசிப்பயறு போன்ற வன்மையுண்டாக்கும் பயிறு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். உணவுடன் பசுநெய், நல்லெண்ணெய், தேங்காய் நெய் சேர்த்துக் கொள்வதால் மிகுந்த நன்மை யுண்டாக்கும்.

5. கார், கூதிர் காலங்களில் வாந்தி மருத்துவம் மேற்கொள்ளாதவர்கள் இக்காலத் தொடக்கத்தில் மேற்கொள்ளல் வேண்டும்.

6. அதிகாலையில் துளசி, மிளகு, வெற்றிலை, தேன் சேர்த்து சுவைத்து சாப்பிடுவதால் மூச்சுப் பாதை சீராகி கோைழ (சளி) யினால் ஏற்படும் பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கப்படும்.

7. பருகும் நீரில் ஒரு லிட்டருக்கு ஒரு தேக்கரண்டி மிளகு அல்லது இலவங்கம் சிதைத்துப் போட்டுக் காய்ச்சிப் பருகுவதால் குளிரைத் தாங்கும் ஆற்றல் உடலுக்குக் கிடைக்கும்.

8. மாலை வேலைகளில் துளசி, வேப்பிலை, நொச்சி, புதினா, தும்பை போன்ற ஏதேனும் ஒரு இலையுடன் மஞ்சள், மிளகு போட்டு கொதிக்க விட்டு கற்பூரம் போட்டு ஆவிபிடித்து விட்டு பின்பு அந்த புகையை அறை முழுவதும் பரவ விடுவதால் குளிர் விலகி நறுமணம் கமழும். இந்த மணமும் சூடும் இக்காலத்தில் ஏற்படும் சிறு பிரச்சனைகளிலிருந்து  நம்மைக் காக்கும்.

நல்ப்பயணம் தொடரும்..............................

by Swathi   on 19 May 2015  0 Comments
Tags: பனி கால பராமரிப்பு   முன் பனி காலம்   Winter Seasons care Tips   Siddha Maruthuvam           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது ? – 40 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது ? – 40
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 37 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 37
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பனி காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் – 36 நலம் காக்கும் சித்த மருத்துவம் : பனி காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் – 36
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.