LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !!

பெங்களூரின் எஸ்.ஜெ. பார் பகுதியில் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக பெண் ஒருவர் நேற்று உள்ளே நுழைந்தார். அவரை பின்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர், ஏ.டி.எம். ஷெட்டரை இழுத்து உள்பக்கமாக பூட்டினான். பின்னர் கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி ஏதோ மிரட்டினான். அந்த பெண் மறுத்து தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றதால், ஆத்திரம் அடைந்த கொள்ளையன் அப்பெண்ணை தான் வைத்திருந்த பையிலிருந்து அரிவாளை எடுத்து மிரட்டினான். அதற்கும் அந்த பெண் பயப்படாமல் இருந்ததால், அப்பெண்ணை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினான். பின்னர் அந்தப் பெண்ணின் பையிலிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பினான். இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே ரத்த துளிகளை கண்ட துப்புரவு பணியாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் அதே கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியின் மேலாளர் ஜோதி என்பது தெரிய வந்தது. பெங்களூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் கமல்பான்ட் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் தற்போது ஓரளவு சுயநினைவு இருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிலையில் அவர் இல்லை. போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் உள்ளனர். அவரிடம் தகவல் பெற முயற்சித்து வருகின்றனர் என்றார். 

by Swathi   on 19 Nov 2013  0 Comments
Tags: ஏ.டி.எம்.   ஏ.டி.எம். மையம்   பெண் மீது தாக்குதல்   கொலை வெறித்தாக்குதல்   ATM   Women Attack   Bangalore ATM Attack  
 தொடர்புடையவை-Related Articles
நீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் !! நீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் !!
ATM - இல் பணம் எடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு !! ATM - இல் பணம் எடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு !!
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது? பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது?
எல்லா ஏடிஎம்மிலும் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவச பண பட்டுவாடா !! எல்லா ஏடிஎம்மிலும் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவச பண பட்டுவாடா !!
ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் !! ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் !!
பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !! பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.