பெண் சுதந்திரம் பற்றிய அம்பேத்கரின் கனவு நினைவாகிக் கொண்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன், ஆளுநர் தமிழிசை பேச்சு
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பொன்விழா ஆண்டிற்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவர் அம்பேத்கரின் பெண் சுதந்திரம் பற்றியக் கனவு நினைவாகி கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன் எனக் கூறினார் .
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பொன்விழா ஆண்டின் தொடக்க விழாவைக் கொண்டாட வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு 9 உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தில் நியமித்தது. அதில் மூவர் பெண்கள் ஆவார்கள். தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீமா ஹோலியும் அந்த மூன்று பெண்களில் ஒருவர்.அவருக்கு ஒரு பெண் ஆளுநராக நான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது பெருமையான தருணம் என்று ஆளுநர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார்
|