LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரிமலையில் பெண்கள் அனுமதி: ஜனாதிபதியை சந்தித்து எதிர்ப்பு மனு அளிக்கிறார் பந்தளம் அரண்மனை நிர்வாகி!

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து, ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக பந்தளம் அரண்மனையின்  நிர்வாகி தெரிவித்துள்ளார். 

சபரிமலையில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மகரவிளக்கு பூஜையின் போது அரண்மனை கைவசம் உள்ள திருவாபரணம் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தொடர்பாக பந்தள மன்னர் குடும்பத்தினர் தரப்பில் இருந்து கருத்துகள் வெளிவராமல் இருந்தது. 

இந்த நிலையில் பந்தளம் அரண்மனை நிர்வாகி சசிகுமார் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

யாரையோ திருப்திப்படுத்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல இந்து அமைப்பினருடன் சேர்ந்து போராட தீர்மானித்துள்ளோம். மேலும் சட்டரீதியாகவும் போராட முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

முதற்கட்டமாக இதுதொடர்பாக விரைவில் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். ஐயப்பனின் பிரம்மச்சரியத்தையும், ஆச்சார முறைகளையும் மாற்ற யாரையும் அனுமதிக்க மாட்டோம்.

சபரிமலையில் பாலின பாகுபாடு உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியதை ஏற்க முடியாது. சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு எந்த தடையும் கிடையாது. பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் இளம்பெண்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிபதிகளுக்கு இந்த விஷயம் கூட தெரியவில்லை என்றால் இவர்கள் எப்படி நீதி வழங்குவார்கள். 

சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகள் குறித்து வக்கீல்கள் நீதிபதிகளுக்கு தெரிவிக்க முயன்றும், அவர்கள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை. சபரிமலையில் அனுமதி உத்தரவின்பேரில் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கோயில்களுக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

இந்து கோயில்களில் ஆச்சார விதிமுறைகளை இந்து சமூகம்தான் உருவாக்கியுள்ளது. அதை மாற்ற சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை. இந்த தீர்ப்பு தொடர்பாக பெண்களிடையே வாக்கெடுப்பு நடத்தினால் 10 சதவீதம் பெண்கள் கூட ஆதரவு அளிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 03 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.