மெக்ஸிகோ, டக்ஸ்ட்லா கட்டிரெஸ் : மெக்சிகோவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மெக்சிகோவின் பசிபிக் கடலோரம் நேற்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. காலை 6.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் உறக்கத்தில் இருந்து பலர் அலறி அடித்துக் கொண்டு எழுந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தென்கிழக்கு பகுதியில் உள்ள கவுதமாலாவிலும் நிலநடுக்கம் சிறிய அளவில் உணரப்பட்டது. உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த மார்ச் 20ம் தேதி மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போது 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்து என்பது குறிப்பிடத்தக்கது.
|