|
|||||
இந்திய அதிகாரி அமெரிக்காவில் கைது-ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணை |
|||||
வாஷிங்டன் :பெண் ஊழியரை தாக்கியதாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வனத்துறை அதிகாரி மீதான விசாரணை,
வரும் 1ம் தேதி நடக்கிறது.
இந்திய வனத்துறை அதிகாரிகள் 30 பேர், நியூயார்க்கில் உள்ள சிராகியூஸ் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒடிசா
மாநிலத்தின் சம்பல்பூர் வனப் பாதுகாவலராக இருப்பவர் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா. இவரும் பயிற்சிக்காக நியூயார்க்
சென்றுள்ளார்.ஓட்டல் ஊழியரை தாக்கியதாக இவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை ஜாமினில் விடுவிக்க, இந்திய
தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பென்சில்வேனியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா
தங்கியிருந்தபோது, கம்ப்யூட்டரில் இணையதள தொடர்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார்
தெரிவித்துள்ளார். அந்த பெண், மகாபத்ரா அறைக்கு வந்து இணையதள தொடர்பை சரி செய்ய முடியாததால் அறையை விட்டு
வெளியேறினார். அந்த பெண் சென்ற பிறகு போலீசார், மகாபத்ராவை கைது செய்தனர். அந்த பெண்ணை இவர் தாக்கியதாக புகார்
பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடுகையில், "ஜாமின் கோரி மகாபத்ரா தரப்பில் இதுவரை மனு
செய்யப்படவில்லை. 35 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு அவர் பிணையத் தொகை செலுத்தினால் ஜாமினில் விடுவிக்கப்படுவார்.
இது தொடர்பான விசாரணை, வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது' என்றனர்.
வாஷிங்டன் : பெண் ஊழியரை தாக்கியதாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வனத்துறை அதிகாரி மீதான விசாரணை, இவரை ஜாமினில் விடுவிக்க, இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பென்சில்வேனியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா தங்கியிருந்தபோது, கம்ப்யூட்டரில் இணையதள தொடர்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண், மகாபத்ரா அறைக்கு வந்து இணையதள தொடர்பை சரி செய்ய முடியாததால் அறையை விட்டு வெளியேறினார். அந்த பெண் சென்ற பிறகு போலீசார், மகாபத்ராவை கைது செய்தனர். அந்த பெண்ணை இவர் தாக்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடுகையில், "ஜாமின் கோரி மகாபத்ரா தரப்பில் இதுவரை மனு செய்யப்படவில்லை. 35 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு அவர் பிணையத் தொகை செலுத்தினால் ஜாமினில் விடுவிக்கப்படுவார். இது தொடர்பான விசாரணை, வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது' என்றனர்.
|
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|