|
|||||
பாகிஸ்தான் அமைச்சராக மீண்டும் தேர்வு மாலிக் |
|||||
இஸ்லாமாபாத்:இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கில், எம்.பி., பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள்
உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்தவர் ரஹ்மான் மாலிக், 60. இவர், கடந்த 2008ம் ஆண்டு, மேல்சபை உறுப்பினரானார்.
இரட்டை குடியுரிமை பெற்ற ரஹ்மான் மாலிக், அரசு பதவியை வகிக்கும் போது, பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்திருக்க
வேண்டும். இவரது இந்த இரட்டை குடியுரிமையை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.ரஹ்மான் மாலிக், பிரிட்டன் குடியுரிமையை
ரத்து செய்து விட்டதற்கான ஆவணங்களை, கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
பல முறை அவகாசம் அளித்தும், இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், ரஹ்மான் மாலிக்கின் பார்லிமென்ட் மேல்சபை
உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்து, நீதிபதிகள், கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
எம்.பி., பதவி சஸ்பெண்ட் ஆனதால், இவர் அமைச்சர் பதவி வகிக்க முடியாமல் போனது. இதையடுத்து, பிரதமரின் உள்துறை
ஆலோசகராக, இவர் பொறுப்பு வகித்து வந்தார். சிந்து மாகாணத்திலிருந்து, மேல்சபைக்கு தேர்வாகியுள்ளதன் மூலம், நேற்று இவர்
அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். உள்துறை இலாகாவை இவர் மீண்டும் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,
இவர் மீண்டும் மேல் சபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
இஸ்லாமாபாத்: இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கில், எம்.பி., பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்தவர் ரஹ்மான் மாலிக், 60. இவர், கடந்த 2008ம் ஆண்டு, மேல்சபை உறுப்பினரானார். இவரது இந்த இரட்டை குடியுரிமையை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. ரஹ்மான் மாலிக், பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்து விட்டதற்கான ஆவணங்களை, கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.பல முறை அவகாசம் அளித்தும், இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், ரஹ்மான் மாலிக்கின் பார்லிமென்ட் மேல்சபை உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்து, நீதிபதிகள், கடந்த மாதம் உத்தரவிட்டனர். எம்.பி., பதவி சஸ்பெண்ட் ஆனதால், இவர் அமைச்சர் பதவி வகிக்க முடியாமல் போனது. இதையடுத்து, பிரதமரின் உள்துறை ஆலோசகராக, இவர் பொறுப்பு வகித்து வந்தார். சிந்து மாகாணத்திலிருந்து, மேல்சபைக்கு தேர்வாகியுள்ளதன் மூலம், நேற்று இவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். உள்துறை இலாகாவை இவர் மீண்டும் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இவர் மீண்டும் மேல் சபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
|
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|