|
|||||
லண்டனில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பி்க் போட்டி துவக்கம் |
|||||
லண்டன்: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கியது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
30-வது ஒலி்ம்பிக் போட்டி இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 204
நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய வீரர்கள்: துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பி்ந்த்ரா, குத்துச்சண்டை விஜேந்தர், பாக்சிங் வீராங்கணை மேரி கோம்,
பேட்மிண்டன் சாய்னா நெஹ்வால், டென்னிசின் லியாண்டர்பயஸ்,மகேஷ்பூபதி, சானியா, வில்வித்தை தீபிகாகுமாரி, உட்பட 81
வீரர்கள் கலந்து கொள்கி்ன்றனர்.
பலத்த பாதுகாப்பு: ஒலிம்பிக்போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து உலக தலைவர்கள் , திரைப்பட துறையினர்.
உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தோர் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவில் செய்யப்பட்டுள்ளது.
லண்டன் நகரில் மட்டும் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர், அதிரடிப்படை கமோண்டோக்கள், போலீசார் என சுமார் 20
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய இசை: லண்டன்: ஒலிம்பிக் போட்டியின் போது இடைவேளை நேரங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இசைக்கப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
லண்டன்: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30-வது ஒலி்ம்பிக் போட்டி இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்திய வீரர்கள், துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பி்ந்த்ரா, குத்துச்சண்டை விஜேந்தர், பாக்சிங் வீராங்கணை மேரி கோம், பேட்மிண்டன் சாய்னா நெஹ்வால், டென்னிசின் லியாண்டர்பயஸ்,மகேஷ்பூபதி, சானியா, வில்வித்தை தீபிகாகுமாரி, உட்பட 81 வீரர்கள் கலந்து கொள்கி்ன்றனர்.பலத்த பாதுகாப்பு, ஒலிம்பிக்போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து உலக தலைவர்கள் , திரைப்பட துறையினர். உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தோர் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவில் செய்யப்பட்டுள்ளது. லண்டன் நகரில் மட்டும் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர், அதிரடிப்படை கமோண்டோக்கள், போலீசார் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் போது இடைவேளை நேரங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இசைக்கப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
|
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|