LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

நல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா ? -ஆரூர் பாஸ்கர்

பதட்டம் அடையலாமா ? என்பதற்குப் பதில் சொல்லும் முன் மறக்காமல் நாம் சென்ற மாதம் என்ன பார்த்தோம் என்பதைக் கொஞ்சம்  நினைவுபடுத்திக் கொள்வோம்.

முந்தைய கட்டுரையில், பல நல்ல தமிழ்ச் சொற்கள் இன்று அதன் உண்மையான பொருளில் இருந்து திரிந்து வேறு பொருளில் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருக்கிறது எனப் பார்த்தோம்.

அந்த வகையில் "நாற்றம்" எனும் நல்ல சொல் அதன் இயல்பில் (மணம்) இருந்து திரிந்து  கெட்ட வாடை எனும் பொருளில் தற்போது பயன்பாட்டில் இருப்பது போல "வெகுளி" எனும் சொல் கோபம் எனும் இயல்பில் இருந்து திரிந்து அப்பாவி என்றாகி விட்டது. அதைச் சரியாக எழுத, பேசப் பழகவேண்டும் எனப் பார்த்தோம்.

இனி நாம் கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். நாம் ஏன் . "பதட்டம்" அடையக்கூடாது, அடைந்தால் அதன் விளைவுகள் என்ன என்பதற்கு இங்கு மருத்துவச் சான்றுகள் தேடப் போவதில்லை. மாறாக  இந்தத் தலைப்பில் இருக்கும் பதட்டம் எனும் சொல்லை மட்டும் கவனிப்போம். அது இன்று ஆங்கிலத்தில் tension, impatient போன்ற சொற்களின் மாற்றாகப் பயன்பாட்டில் இருக்கிறது. "பதட்டம்" என்பது எழுத்து, பேச்சுவழக்கில் இருந்தாலும் அதைப் "பதற்றம்" என்றே எழுத, பேச வேண்டும்.

"பதறிய காரியம் சிதறும்" எனச் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே. அதாவது நாம் எந்தவொரு செயலிலும் ஈடுபடும் போதும் மனத்தைத் திடமாக வைத்துச் செயல்படவேண்டும் என்பார்கள். உண்மையில் "பதற்றம்" எனும் சொல் "பதறு" என்ற வினைவேரிலிருந்தே உருவாகிறது.  பதறு என்பது கலங்குதல், முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல் போன்ற பொருளில் வரும்.

சரி இனி, பதட்டம் அடைய மாட்டோம். பதற்றம் அடையலாமா ? என நீங்கள்  அவசர அவசரமாகக் கேட்பது என் காதில் விழுகிறது. அதற்கும் எனது பதில் “வேண்டாம்“ என்பதே.

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.