|
||||||||
நல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா ? -ஆரூர் பாஸ்கர் |
||||||||
பதட்டம் அடையலாமா ? என்பதற்குப் பதில் சொல்லும் முன் மறக்காமல் நாம் சென்ற மாதம் என்ன பார்த்தோம் என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம். முந்தைய கட்டுரையில், பல நல்ல தமிழ்ச் சொற்கள் இன்று அதன் உண்மையான பொருளில் இருந்து திரிந்து வேறு பொருளில் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருக்கிறது எனப் பார்த்தோம். அந்த வகையில் "நாற்றம்" எனும் நல்ல சொல் அதன் இயல்பில் (மணம்) இருந்து திரிந்து கெட்ட வாடை எனும் பொருளில் தற்போது பயன்பாட்டில் இருப்பது போல "வெகுளி" எனும் சொல் கோபம் எனும் இயல்பில் இருந்து திரிந்து அப்பாவி என்றாகி விட்டது. அதைச் சரியாக எழுத, பேசப் பழகவேண்டும் எனப் பார்த்தோம். இனி நாம் கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். நாம் ஏன் . "பதட்டம்" அடையக்கூடாது, அடைந்தால் அதன் விளைவுகள் என்ன என்பதற்கு இங்கு மருத்துவச் சான்றுகள் தேடப் போவதில்லை. மாறாக இந்தத் தலைப்பில் இருக்கும் பதட்டம் எனும் சொல்லை மட்டும் கவனிப்போம். அது இன்று ஆங்கிலத்தில் tension, impatient போன்ற சொற்களின் மாற்றாகப் பயன்பாட்டில் இருக்கிறது. "பதட்டம்" என்பது எழுத்து, பேச்சுவழக்கில் இருந்தாலும் அதைப் "பதற்றம்" என்றே எழுத, பேச வேண்டும். "பதறிய காரியம் சிதறும்" எனச் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே. அதாவது நாம் எந்தவொரு செயலிலும் ஈடுபடும் போதும் மனத்தைத் திடமாக வைத்துச் செயல்படவேண்டும் என்பார்கள். உண்மையில் "பதற்றம்" எனும் சொல் "பதறு" என்ற வினைவேரிலிருந்தே உருவாகிறது. பதறு என்பது கலங்குதல், முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல் போன்ற பொருளில் வரும். சரி இனி, பதட்டம் அடைய மாட்டோம். பதற்றம் அடையலாமா ? என நீங்கள் அவசர அவசரமாகக் கேட்பது என் காதில் விழுகிறது. அதற்கும் எனது பதில் “வேண்டாம்“ என்பதே. |
||||||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|